ஷூ கூட இல்ல.. அந்த நேரத்தில் சிவகார்த்திகேயன் அண்ணா செய்த உதவி.. இந்திய வீராங்கனை சஜனா நெகிழ்ச்சி!
சென்னை: 2018 வயநாட்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது இந்திய கிரிக்கெட் வீராங்கனை சஜீவன் சஜனாவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் உதவி செய்திருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து சோசியல் மீடியாவில் பலரும் சிவகார்த்திகேயனுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
அண்மையில் முடிவடைந்த மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் முக்கிய வீராங்கனையாக உருவாகினார் சஜீவன் சஜனா. கேரளாவைச் சேர்ந்த சஜனாவுக்கு தமிழ்நாட்டிலும் மிகப்பெரிய ரசிகர்கள் இருக்கிறார்கள். அதற்கு சஜனாவின் சினிமா வாழ்க்கையே காரணம். இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான கனா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் நண்பராக சஜனா நடித்திருப்பார்.

இதனால் டபியுள்யூபிஎல் தொடரில் மும்பை அணிக்காக சஜனா வாங்கப்பட்ட போதே, தமிழக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறினர். அதேபோல் மும்பை அணிக்காக அறிமுகமான முதல் போட்டியிலேயே வாழ்வா சாவா என்ற நிலையில் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்திருப்பார். இதுவே அவருக்கு இந்திய அணியிலும் இடத்தை பிடிக்க காரணமாக மாறியது.
இந்த நிலையில் கிரிக்கெட் வீராங்கனை சஜனா 2018ஆம் ஆண்டு வயநாடு பெருவெள்ளத்தின் போது நிகழ்ந்த மோசமான சம்பவங்களையும், அதன்பின் நடிகர் சிவகார்த்திகேயன் உதவி குறித்தும் பகிர்ந்துள்ளார். அதில், 2018 வயநாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் என் வீடு மொத்தமாக அடித்து செல்லப்பட்டது. வீட்டில் இருந்த பொருட்களும் இல்லை.
கிரிக்கெட்டில் வென்ற கோப்பைகள், எனது கிரிக்கெட் உபகரணங்கள், விருதுகள் என்று அனைத்து காணாமல் போயின. அந்த நேரத்தில்தான் என்னை சுற்றியுள்ளவர்கள் உதவி செய்தார்கள். தமிழ் சினிமா நடிகர் சிவகார்த்திகேயன் என்னை அழைத்து, ஏதாவது உதவி தேவையா என்று கேட்டார். அப்போது அவரிடம், அண்ணா.. என் கிரிக்கெட் உபகரணங்கள் மொத்தமாக சென்றுவிட்டது..
புதிய ஸ்பைக் ஷூ அத்தியாவசிய தேவையாக உள்ளது என்று கூறினேன். அடுத்த ஒரு வாரத்தில் எனக்கு தேவையான ஸ்பைக் ஷூ, உபகரணங்கள் வந்து சேர்ந்தது. அந்த நேரத்தில் சேலஞ்சர் டிராபி விளையாட செல்ல வேண்டிய சூழலில் இருந்தேன். அதேபோல் என் குடும்பத்தினர் பாதுகாப்பு பற்றிய கேள்வி எழும் போதெல்லாம், எனக்கு பதற்றம் ஏற்படும்.
கொரோனா பரவல் வந்த போது கேரளா கிரிக்கெட் சங்கம் ஆதரவாக இருந்தது. இதன்பின் மும்பை அணி என்னை மகளிர் ஐபிஎல் தொடரில் ரூ.15 லட்சத்திற்கு வாங்கினார்கள். இப்போது எனது வருமானம் மூலமாக குடும்பத்தினர் நன்றாக இருக்கிறார்கள். வீட்டுக் கடனை விரைவாக அடைத்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications