நான் காமராஜர் காலத்திலேயே முதல்வராக வேண்டியது! ஜஸ்ட் மிஸ்ஸாகிவிட்டது! நடிகர் சிவகுமார் கலகல!
சென்னை: காமராஜர் காலத்திலேயே முதல்வராக வேண்டும் என நினைத்தேன், அந்த வாய்ப்பு மிஸ்ஸாகிவிட்டது என நடிகர் சிவகுமார் கலகலப்பாக பேசியுள்ளார். அரசியலுக்கு வர விருப்பமா என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்திருந்தார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், நடிகர்கள் நாட்டை ஆள முடியும் என்பதை எம்ஜிஆர் நிரூபித்து காட்டினார். அவரை போன்ற நடிகர் இனி பிறக்க போவதில்லை. ரொனால்ட் ரீகனுக்கு முன்பே நாட்டை ஆண்டவர் எம்ஜிஆர். ஆனால் எம்ஜிஆருக்கு வாரிசுகளே இல்லை.

உலகிலேயே பெரிய நடிகர் சிவாஜி கணேசன், அவரை போல் ஒருத்தர் மீண்டும் பிறக்க வாய்ப்பே இல்லை. அவ்வளவு பெரிய நடிகர் அரசியலில் தோற்றுத்தான் போனார். என்ன சொல்ல வருகிறேன் என்றால் எல்லாம் பெற்றவன் யாரும் இல்லை.
நீங்கள் உழைத்துக் கொண்டே இருங்கள், கடவுள் கொடுப்பதை வைத்து சந்தோஷமாக இருங்கள். இன்னொருத்தருடன் ஒப்பிடாதீர்கள். நான் காமராஜர் காலத்திலேயே முதல்வராக நினைத்தேன். அந்த வாய்ப்பு தவறிவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications