ராஜீவ் வழக்கு: பேரறிவாளனை சீக்கிரம் விடுதலை செய்யனும்.. நடிகர் விஜய்சேதுபதி
சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு எடுத்து 2 ஆண்டுகளாகிறது. ஆனால் இதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் வழங்கவில்லை.

ஆளுநர் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி
இது தொடர்பான வழக்கில் ஆளுநரின் 2 ஆண்டுகால தாமதம் தொடர்பாக உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை தெரிவித்திருந்தது. மேலும் 7 தமிழரின் விடுதலையில் விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

சமூக வலைதளங்களில் கோரிக்கை
இந்த நிலையில் 7 தமிழரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைதளங்களில் வலியுறுத்தப்பட்டும் வருகிறது. இதற்கான ஹேஷ்டேக்குகளும் உருவாக்கப்பட்டு ஷேர் செய்யபட்டு வருகின்றன. பல்வேறு துறைசார் பிரமுகர்களும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.

நடிகர் விஜய்சேதுபதி
இதேபோல் நடிகர் விஜய்சேதுபதியும் ஒரு வீடியோ பதிவில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறார். அதில், எல்லோருக்கும் வணக்கம். நான் விஜய்சேதுபதி பேசுகிறேன். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து பேரறிவாளனை ஆளுநர் அவர்கள் விடுதலை செய்யனும்னு வேண்டி கேட்டுக்கிறேன்.
பேரறிவாளனை விடுதலை செய்யுங்க
அற்புதம் அம்மாள் அவர்களின் 29 வருட போராட்டம், ஒரு குற்றமற்றவருக்கு விடுதலை கொடுங்கன்னு வேண்டி கேட்கிறோம். தயவு செய்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து பேரறிவாளன் அண்ணா அவர்களை சீக்கிரமா விடுதலை பண்ணனும் நன்றி வணக்கம் என கூறியுள்ளார் விஜய்சேதுபதி.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications