என் சமையலையாவது நேரத்துல முடிச்சிருப்பேன்.. பிரதமர் மோடி பேச்சை கிண்டலடித்த குஷ்பு!
சென்னை: பிரதமர் மோடியின் பேச்சால் நேரம்தான் வீணானது என விமர்சித்த பிரபல நடிகையை வலைதள வாசிகள் வச்சு செய்து வருகின்றனர்.
கொரோனா வைரஸின் தாக்கத்தால் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் இந்தியாவில் மூன்று கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவும் வரும் 17 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு மக்களிடையே தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது கொரோனா வைரஸின் பாதிப்பு மக்களுக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்தது என்றார்.

தயாரக வேண்டும்
தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறித்து பேசிய பிரதமர் மோடி, ஒரு வைரஸ் உலக நாடுகளை நாசப்படுத்தியிருப்பதாக கூறினார். கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும் என்று ம் கூறினார் பிரதமர் மோடி.

பொருளாதார திட்டங்கள்
மேலும் இந்திய பொருளாதாரத்தை உயர்த்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கு பொருளாதார திட்டங்களை அறிவித்தார் பிரதமர் மோடி. இதன் மூலம் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்றார் பிரதமர் மோடி.

4வது லாக்டவுன்
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி 4வது கட்டமாக இந்தியாவில் லாக்டவுன் இருக்கும் என்றார். ஆனால் 4வது கட்ட பொதுமுடக்கம் மாறுபட்டதாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார். இதுதொடர்பான விபரங்கள் வரும் 18ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றார்.

நடிகை குஷ்பு
மோடியின் பேச்சுக்கு குறித்து சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு பிரதமர் மோடியின் பேச்சு குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

நல்லாருக்கும்..
மிகவும் கடினமான இந்த காலங்களில் ஒவ்வொரு கணக்கிலும் 15 லட்சத்தை எப்படி டெபாசிட் செய்வது மோடிஜி 2014 இல் வாக்குறுதியளித்தபடி?? இது நெருக்கடிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கவில்லையா? சொலுங்க சாமி, பதினைந்து லட்சம் கொஞ்சம் எல்லா அக்கவுண்ட்லேயும் போட்டிங்கன்னா நல்லா இருக்கும்ல சொல்லுங்க.. என பதிவிட்டுள்ளார்.

வெறும் காத்துதான்..
மற்றொரு டிவிட்டில், 8 மணி.. என்னாச்சு.. வெறும் காத்துதான் வந்துச்சு.. ஃப்யூ.. என ஊதியிருக்கிறார் குஷ்பு. மேலும் 20 லட்சம் கோடி பேக்கேஜ்... வங்கிகளை ஏமாற்றிய நண்பர்களிடம் இருந்து 68000 கோடி ரூபாயை திரும்பப் பெறுவது எப்படி என்று கேட்டிருக்கிறார்.

நெட்டிசன்கள் கண்டனம்
மேலும் ஒரு டிவிட்டில் போங்கடா.. என் சமையலையாவது நேரத்துல முடிச்சிருப்பேன்.. டைம் வீணா போச்சு என தெரிவித்திருக்கிறார் குஷ்பு. குஷ்புவின் இந்த டிவிட்டுகளுக்கு சிலர் ஆதரவு தெரிவித்திருந்தாலும் பெரும்பாலான நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications