அடையாறு, அண்ணா நகர் என பல பகுதிகளில் இன்று மின்சாரம் இருக்காது! லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று அடையாறு, அண்ணா நகர்ப் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதனால் இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளவும்.

சென்னையில் ஒவ்வொரு பகுதியில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வப்போது துண்டிக்கப்படும். மின்சாரம் துண்டிக்கப்படும் இடங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வார்கள். அதன்படி இன்றைய தினம் அடையாறு, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது.

electricity chennai power cut


அதன்படி இந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. பராமரிப்பு பணிகள் முன்கூட்டியே முடிந்தால் அதற்கேற்ப மின்சாரம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மின் தடை: இதன் காரணமாக நாளைய அம்பத்தூர் பகுதியில் அம்பத்தூர் சிட்கோ, சீனிவாசன் அகார், 7வது தெரு மற்றும் 8வது தெரு, 8வது குறுக்கு தெரு மற்றும் 9வது குறுக்கு தெரு, வடக்கு கட்டம் 9வது தெரு, சிட்கோ, தொழிற்பேட்டை, பொன்னியம்மன் நகர், 10வது தெரு, 11வது தெரு, பொன்னியம்மன் கோயில் சுற்றுவட்டாரப் பகுதி சிட்கோ இண்டஸ்ட்ரியல் பகுதியில் மின்சாரம் இருக்காது.

அண்ணாநகர் பகுதியில் சாந்தி காலனி, பெரியகூடல், பாரதிபுரம், கஜலட்சுமி காலனி பகுதி, ஷெனாய் நகர் மேற்கு, 1வது பிரதான சாலை, மேற்கு பூங்கா சாலையில் மின் இணைப்பு துண்டிக்கப்படும். அதேபோல பொன்னேரியில் கும்மிடிப்பூண்டி பஜார், ஜிஎன்டி சாலை, பெத்திக்குப்பம் ரயில்வே பாலம், பாலகிருஷ்ணாபுரம், மா.பொ.சி.நகர், வேர்காடு, ரெட்டம்பேடு பிரதான சாலை, ஆத்துப்பாக்கம், ஏனாதி மேல்பாக்கம், சோலியம்பாக்கம், தேர்வாழி, தம்புரெட்டி பாளையம், அப்பாவரம், மங்கவரம், வில்லாரிகேஸ் பகுதியி்ல மின்வெட்டு இருக்கும்

அடையாறு: சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான அடையாறு பகுதியில் பெசன்ட் நகர் 1வது பிரதான சாலை மற்று்ம 2வது பிரதான சாலை, 16வது குறுக்குத் தெரு முதல் 25வது குறுக்குத் தெரு, 3வது பிரதான சாலை பசந்த் நகர், CPWD குவாட்டர்ஸ், 6வது அவென்யூ பெசன்ட் நகர், ஓடைக்குப்பம் பகுதி, திடீர் நகர் பகுதி மற்றும் 7வது அவென்யூ பகுதியிலும் மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 வரை மின்சாரம் இருக்காது. பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மதியம் 2 மணிக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+