அடையாறு, அண்ணா நகர் என பல பகுதிகளில் இன்று மின்சாரம் இருக்காது! லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா பாருங்க!
சென்னை: மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று அடையாறு, அண்ணா நகர்ப் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதனால் இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளவும்.
சென்னையில் ஒவ்வொரு பகுதியில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வப்போது துண்டிக்கப்படும். மின்சாரம் துண்டிக்கப்படும் இடங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வார்கள். அதன்படி இன்றைய தினம் அடையாறு, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது.

அதன்படி இந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. பராமரிப்பு பணிகள் முன்கூட்டியே முடிந்தால் அதற்கேற்ப மின்சாரம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மின் தடை: இதன் காரணமாக நாளைய அம்பத்தூர் பகுதியில் அம்பத்தூர் சிட்கோ, சீனிவாசன் அகார், 7வது தெரு மற்றும் 8வது தெரு, 8வது குறுக்கு தெரு மற்றும் 9வது குறுக்கு தெரு, வடக்கு கட்டம் 9வது தெரு, சிட்கோ, தொழிற்பேட்டை, பொன்னியம்மன் நகர், 10வது தெரு, 11வது தெரு, பொன்னியம்மன் கோயில் சுற்றுவட்டாரப் பகுதி சிட்கோ இண்டஸ்ட்ரியல் பகுதியில் மின்சாரம் இருக்காது.
அண்ணாநகர் பகுதியில் சாந்தி காலனி, பெரியகூடல், பாரதிபுரம், கஜலட்சுமி காலனி பகுதி, ஷெனாய் நகர் மேற்கு, 1வது பிரதான சாலை, மேற்கு பூங்கா சாலையில் மின் இணைப்பு துண்டிக்கப்படும். அதேபோல பொன்னேரியில் கும்மிடிப்பூண்டி பஜார், ஜிஎன்டி சாலை, பெத்திக்குப்பம் ரயில்வே பாலம், பாலகிருஷ்ணாபுரம், மா.பொ.சி.நகர், வேர்காடு, ரெட்டம்பேடு பிரதான சாலை, ஆத்துப்பாக்கம், ஏனாதி மேல்பாக்கம், சோலியம்பாக்கம், தேர்வாழி, தம்புரெட்டி பாளையம், அப்பாவரம், மங்கவரம், வில்லாரிகேஸ் பகுதியி்ல மின்வெட்டு இருக்கும்
அடையாறு: சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான அடையாறு பகுதியில் பெசன்ட் நகர் 1வது பிரதான சாலை மற்று்ம 2வது பிரதான சாலை, 16வது குறுக்குத் தெரு முதல் 25வது குறுக்குத் தெரு, 3வது பிரதான சாலை பசந்த் நகர், CPWD குவாட்டர்ஸ், 6வது அவென்யூ பெசன்ட் நகர், ஓடைக்குப்பம் பகுதி, திடீர் நகர் பகுதி மற்றும் 7வது அவென்யூ பகுதியிலும் மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 வரை மின்சாரம் இருக்காது. பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மதியம் 2 மணிக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications