ஐப்பசி மாத சுபமுகூர்த்தம்! நாளை சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்!
சென்னை: ஐப்பசி மாத சுபமுகூர்த்த நாளான அக்டோபர் 31 ஆம் தேதியான நாளை சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என பதிவுத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து பத்திரப்பதிவு துறை கூறுகையில், ஐப்பசி மாத சுபமுகூர்த்த நாளான நாளை சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும். ஒரு சார்பதிவாளர் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதலாக 50 டோக்கன்களும் 2 சார்பதிவாளர் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதலாக 100 டோக்கன்களும் வழங்கப்படும்.

12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 டோக்கன்கள் வழங்கப்படும் என பதிவுத் துறை தெரிவித்துள்ளது. சுபமுகூர்த்த தினங்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் புதிய முன்பதிவுகள் அதிகம் நடைபெறும். அந்த வகையில் புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாத சுபமுகூர்த்த தினங்களில் அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் அடிப்படையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த வகையில் கடந்த 24 ஆம் தேதி கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் நாளையும் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications