Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பழிவாங்குறீங்களா? தி.நகர் சத்யா வீடு முன்பு குவிந்த அதிமுக தொண்டர்கள்.. போலீசாருடன் வாக்குவாதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தி. நகர் சத்யா வீடு, பண்ணை வீடு உட்பட மொத்தம் 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தி.நகர் சத்யா வீடு முன்பு அதிமுகவினர் திரண்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 2016 முதல் 2021 வரை அதிமுக ஆட்சி காலகட்டத்தில் சென்னை தியாகராய நகர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் சத்தியநாராயணன். தி.நகர் சத்யா என்று அழைக்கப்படும் இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து, தனது சொத்து மதிப்பை மறைத்து தேர்தலில் போட்டியிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ADMK cadres gathered in front of T Nagar Sathya house and had an argument with police

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்து 2 மாதத்துக்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து வருமானத்துக்கு அதிமாக சொத்துக்குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ, தி.நகர் சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

தி.நகரில் உள்ள சத்யாவின் வீடு உள்பட அவருக்கு தொடர்புடைய 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் வடபழனி, நெற்குன்த்திலும், உள்பட 16 இடங்களிலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அவரது பண்ணை வீடு, கோவையில் ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ தி.நகர் சத்யா, வருமானத்துக்கு அதிகமாக ரூ. 2.64 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரது மனைவி ஜெயசித்ரா, மகள் கவிதா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 2016ல், ரூ. 3.21 கோடி மதிப்புள்ள 21 சொத்துகள் வைத்திருந்ததாகவும், 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும்போது அவரிடம் ரூ. 16.44 கோடி மதிப்பில் 38 சொத்துகள் அதிகரித்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

ADMK cadres gathered in front of T Nagar Sathya house and had an argument with police

லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று காலை 6.30 மணி முதல் தி.நகர் மற்றும் வடபழனியில் உள்ள சத்யா வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தி.நகரில் உள்ள சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், வீட்டின் முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரிடம் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திமுக அரசு, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தி.நகர் சத்யாவை பழிவாங்க ரெய்டு நடத்துகிறதா எனக் கேட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தியும் அவர்கள் அங்கிருந்து செல்லாமல் கூச்சல் போட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+