பழிவாங்குறீங்களா? தி.நகர் சத்யா வீடு முன்பு குவிந்த அதிமுக தொண்டர்கள்.. போலீசாருடன் வாக்குவாதம்!
சென்னை: அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தி. நகர் சத்யா வீடு, பண்ணை வீடு உட்பட மொத்தம் 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தி.நகர் சத்யா வீடு முன்பு அதிமுகவினர் திரண்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 2016 முதல் 2021 வரை அதிமுக ஆட்சி காலகட்டத்தில் சென்னை தியாகராய நகர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் சத்தியநாராயணன். தி.நகர் சத்யா என்று அழைக்கப்படும் இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து, தனது சொத்து மதிப்பை மறைத்து தேர்தலில் போட்டியிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்து 2 மாதத்துக்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து வருமானத்துக்கு அதிமாக சொத்துக்குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ, தி.நகர் சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
தி.நகரில் உள்ள சத்யாவின் வீடு உள்பட அவருக்கு தொடர்புடைய 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் வடபழனி, நெற்குன்த்திலும், உள்பட 16 இடங்களிலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அவரது பண்ணை வீடு, கோவையில் ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ தி.நகர் சத்யா, வருமானத்துக்கு அதிகமாக ரூ. 2.64 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரது மனைவி ஜெயசித்ரா, மகள் கவிதா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 2016ல், ரூ. 3.21 கோடி மதிப்புள்ள 21 சொத்துகள் வைத்திருந்ததாகவும், 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும்போது அவரிடம் ரூ. 16.44 கோடி மதிப்பில் 38 சொத்துகள் அதிகரித்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று காலை 6.30 மணி முதல் தி.நகர் மற்றும் வடபழனியில் உள்ள சத்யா வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தி.நகரில் உள்ள சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், வீட்டின் முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரிடம் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திமுக அரசு, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தி.நகர் சத்யாவை பழிவாங்க ரெய்டு நடத்துகிறதா எனக் கேட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தியும் அவர்கள் அங்கிருந்து செல்லாமல் கூச்சல் போட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
எடப்பாடியில் குமுறும் "குக்கர்.." கடைசி நேரத்தில் விஐபி தொகுதியில் விரிசல்? அதிர்ச்சியில் இபிஎஸ் -
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு! உடனே விண்ணப்பிங்க -
எடப்பாடியில் "மிஸ்ஸிங்!" 233ல் ‘வாட்சிங்!’ தமிழகம் முழுக்க ரகசிய டீமை இறக்கிய விஜய்? பரபரக்கும் தவெக -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
கூட்டணி தர்மம் காற்றில் பறக்குது.. தேமுதிக மட்டும்தான் இருக்கும்.. திமுகவை கழற்றிவிட்ட கூட்டணிகள்? -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது?












Click it and Unblock the Notifications