சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடிநீர் பிடிப்பதில் தகராறு.. நடந்து சென்ற அதிமுக பிரமுகரை ரவுண்டிய கட்டிய 3 பேர்!

Google Oneindia Tamil News

Recommended Video

    குடிநீர் பிடிப்பதில் தகராறு.. நடந்து சென்ற அதிமுக பிரமுகரை ரவுண்டிய கட்டிய 3 பேர்!-வீடியோ

    பல்லாவரம்: தண்ணீர் பிரச்சனை காரணமாக, வட்ட செயலாளர் விஜயகுமாரை 3 பேர் ரவுண்டு கட்டி வெட்டி சாய்த்து விட்டனர்!

    தண்ணீர் பஞ்சம் வந்ததில் இருந்தே நிறைய வன்முறைகளும் சேர்ந்து நடக்கிறது. கொலை, வெட்டுகுத்து, அடிதடி என ஒவ்வொரு மாவட்டத்திலும் தினமும் நடந்து வருகிறது.

    admk functionary attacked by a gang

    அதன்படியே இன்னொரு அரிவாள் வெட்டும் தண்ணீர் பிரச்சனையால் ஏற்பட்டுள்ளது. ஜமீன் பல்லாவரம், ராஜாஜி நகரை சேர்ந்தவர் விஜயகுமார், 46 வயசாகிறது. பல்லாவரம் நகராட்சி 8-வது வார்டு, அதிமுக. வட்ட செயலாளராக இருக்கிறார்.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த, சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் தெரு மக்களுக்கு தண்ணீர் விடுவதில் சண்டை எழுந்துள்ளது.

    நேற்று இரவு, விஜயகுமார் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த சமயம், திடீரென்று எதிர்தரப்பினர் அவரை வளைத்து சுற்றிக் கொண்டனர். அவர்களிடமிருந்து செல்லவும் முடியவில்லை.. ஆளுக்கொரு அரிவாளை வைத்திருந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் விஜயகுமாரை வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டது கும்பல்.

    ரத்த வெள்ளத்தில் மிதந்த விஜயகுமார், குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உடனடியாக சேர்க்கப்பட்டார். இன்னமும்கூட உயிருக்கு ஆபத்தான நிலையில்தான் அவர், அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். பல்லாவரம் போலீசார் வழக்கு பதிவு, எஸ்கேப் உள்ள மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

    English summary
    AIADMK person Vijayakumar hacked by a gang in Chennai Pallavaram due to prejudice
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X