தஞ்சை சுற்றுப்பயணத்தை ரத்து செய்த எடப்பாடி பழனிசாமி! கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்! என்ன பின்னணி?
சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டிற்கு நாளை மறுநாள் சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டிருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் திருப்பமாக தனது பயணத்தை ரத்து செய்திருக்கிறார்.
வைத்திலிங்கத்தின் சொந்த ஊரான ஒரத்தநட்டிற்கு எடப்பாடி பழனிசாமி செல்லவிருந்ததால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் அதிமுக தலைமைக்கழகம் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;
''எடப்பாடி K. பழனிசாமி 4.5.2023 அன்று, தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், ஒரத்தநாட்டில் நடைபெற இருந்த பொதுக்கூட்டம் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளிலும்; அதனைத் தொடர்ந்து, பாபநாசம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கபிஸ்தலம் கிராமம், அம்மா அரங்கத்தில், மறைந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு மார்பளவு வெண்கலச் சிலை திறப்பு விழாவிலும் பங்கேற்பதாக இருந்தது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்துவரும் நிலையில், மேற்கண்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டு, 15.5.2023 திங்கட் கிழமை அன்று, கழகப் பொதுச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், ஒரத்தநாட்டில் நடைபெறும் பொதுக்கூட்டம் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அதனைத் தொடர்ந்து பாபநாசம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கபிஸ்தலம் கிராமம், அம்மா அரங்கத்தில், மறைந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு மார்பளவு வெண்கலச் சிலை திறப்பு விழாவிலும் பங்கேற்கவிருக்கிறார்.
கழகப் பொதுச் செயலாளர், எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.'' இதனிடையே என்னதான் மழையை காரணமாக கூறினாலும், உள்ளே வேறு சில முக்கிய காரணங்கள் இருக்கலாம் என்ற முணுமுணுப்பும் அதிமுக தரப்பில் கேட்கிறது.












Click it and Unblock the Notifications