சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

6 மாதங்களுக்குப் பின் சென்னை கோயம்பேடு மொத்த பழவியாபார கடைகள் திறப்பு

Google Oneindia Tamil News

சென்னை: 6 மாதங்களுக்குப் பின்னர் சென்னை கோயம்பேடு மொத்த பழவியாபார கடை திறக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பரவலில் கோயம்பேடு காய்கறி சந்தை முக்கிய காரணியாக இருந்ததால் 6 மாதங்களுக்கு முன்னர் மூடப்பட்டது. பின்னர் காய்கறி சந்தை மட்டும் அண்மையில் திறக்கப்பட்டது.

After 6 months Chennai Koyambedu fruits wholesale market open

ஆனால் மொத்த பழவியாபார கடைகள் திறக்கப்படாமல் இருந்தன. இது தொடர்பாக மொத்த பழ வியாபாரிகள் கடை உரிமையாளர்கள் அரசுக்கும் கோரிக்கை வைத்தனர்.

இதனடிப்படையில் 6 மாதங்களுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் சென்னை கோயம்பேடு மொத்த பழவியாபார கடைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து சரக்கு வாகனங்களில் இருந்து பழங்கள் கொண்டுவரப்பட்டன.

கோயம்பேடு சந்தையில் சரக்கு வாகனங்கள் இரவு 7 மணி முதல் காலை 5 மணிவரை மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
After 6 months Chennai Koyambedu fruits wholesale market open from Sunday Night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X