Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அட.. இந்தி மாநிலத்துக்கும் வந்துட்டாரே! முதல்வர் ஸ்டாலினால் புலம்பும் பாஜகவினர்! அவரே சொன்ன ரகசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டுக்குள் முடங்கி கிடப்பார் என பார்த்தால் இந்தி பேசும் மாநிலங்களுக்கும் வந்துவிட்டாரே என என்னை பார்த்து பாஜகவினர் புலம்புகின்றனர் என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் ஸ்பேஸில் நடந்த உரையாடலில் கூறினார்.

திமுக சார்பில் திராவிட மாதம் என்பது செப்டம்பரில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஒரு மாதமாக திமுக திராவிட மாத கொண்டாட்டத்தை கொண்டாடி வந்தது.

After reached my broadcast to Hindi states, BJP leaders lamenting, says CM Stalin on X Space

திமுக ஐடி விங்க் சார்பில் ஏற்படுத்தப்பட்ட எக்ஸ் ஸ்பேஸ் (முன்பு ட்விட்டர் ஸ்பேஸ்) கலந்துரையாடலில் திமுக தலைவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தி வந்தனர்.

இந்நிலையில் தான் திராவிட மாத கொண்டாட்டத்தின் இறுதி நாளான இன்று முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் ஸ்பேஸில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: சமூக வலைதளங்கள் வாயிலாக நாம் அனைவரும் கொள்கைகளை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். கொள்கைகளை பரப்புவதற்கான வலைதளங்களை நாம் பயன்படுத்த வேண்டும். ட்விட்டர், பேஸ்புக், யூடியூப், டெலிகிராம் உள்பட வெவ்வேறு தளங்களை பயன்படுத்த வேண்டும்.

நான் கூட ‛ஸ்பிக்கிங் பார் இந்தியா' என ‛ப்ரோட்காஸ்ட்' தொடங்கி இருக்கிறேன். இதில் 2 எபிசோட் முடிவடைந்துள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளிலும் இது வெளியாகி வருகிறது. இதனால் தமிழ்நாட்டுக்கு முடங்கி கிடப்பார் என பார்த்தால் இந்தி மாநிலங்களுக்கு வந்துவிட்டாரே என பாஜகவினர் புலம்புகிறார்கள்.

நாம் சேர்ந்து செயல்படுவோம். நாம் அப்டேட்டாகவும், அட்வான்ஸாகவும் இருக்க வேண்டும். மேலும் இந்தியாவுக்காக நாம் பேசுவதை ஒரே நேரத்தில் பல லட்சம் பேரால் கேட்க முடியும். இது 10 முதல் 14 மாநாட்டுக்கு சமம். இன்னும் சொல்லப்போனால் நம்மை எதிர்ப்பவர்கள் கூட கேட்கிறார்கள். மாநாட்டுக்கு கூட சொந்த கட்சியினர் தான் வருவார்கள். ஆனால் இது அப்படியில்லை. அதோடு நம் கொள்கைகளை கேட்டு வேறு கட்சியினர் மனம் மாறவும் வாய்ப்புண்டு'' என்றார்.

முன்னதாக இந்த உரையாடலின்போது ‛‛அதிமுகவுக்கு கொள்கை என்பதே இல்லை. பாஜகவை பொறுத்தவரை அனைவரும் பொய் சொல்கின்றனர். பிரதமர், மத்திய அமைச்சர்கள் உள்பட பலரும் நாடாளுமன்றத்தில் பொய்களை பேசி வருகின்றனர் நாம் அனைத்துக்கும் பதில் சொல்லி கொள்ள வேண்டி இருக்க முடியுமா. கள்ள கூட்டணியில் உள்ள கூட்டணியில் உள்ள பரப்பும் பொய்களுக்கு ஆயுள் குறைவு. நமது கொள்கைக்கு ஆயுள் அதிகம். இதனால் 6வது முறையாக ஆளும் வாய்ப்பு வந்துள்ளது. இதனை தொடர்ந்து செய்தால் 40ம் நமதே நாடு நமதே என்றாகி விடும்'' என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+