அம்மா அம்மா தான்.. ஜெயிலில் இருந்து வீடு திரும்பிய டிடிஎப் வாசன்.. வீட்டில் தாய் செய்த தரமான சம்பவம்
சென்னை: பைக் ஓட்டி விபத்தில் சிக்கிய யூடியூபர் டிடிஎப் வாசன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கிடைத்த நிலையில் நேற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். இதையடுத்து அவரை வீட்டுக்கு அழைத்து சென்ற தாய் அவருக்கு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் டிடிஎப் வாசன். இவர் பைக்கில் வெளிமாநிலங்களுக்கு ரைட் சென்று அதனை வீடியோவாக யூடியூப்பில் பதிவேற்றி வருகிறார். இவரை பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகமாக பாலோ செய்து வருகின்றனர்.

இதற்கிடையே தான் அடிக்கடி டிடிஎப் வாசன் போக்குவரத்து விதிகளை மீறி சிக்கலில் சிக்கி கொள்வது உண்டு. அதிவேகமாக பைக் ஓட்டுவது உள்பட பல்வேறு பிரிவுகளில் அவர் மீது போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே வழக்குகள் பதிவாகி உள்ளன. பல வழக்குகளில் அவர் அபராதம் செலுத்தி உள்ளார்.
இதற்கிடையே தான் கடந்த செப்டம்பர் மாதம் டிடிஎப் வாசன் விலையுயர்ந்த பைக்கில்காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவரது பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. பைக் பல்டி அடித்து சாலையோரம் விழுந்த நிலையில் டிடிஎப் வாசன் தூக்கி வீசப்பட்டார். அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் போலீசார் டிடிஎப் வாசன் மீது வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுதல் உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அதன்பிறகு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே டிடிஎப் வாசன் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதால் அவரது லைசென்ஸ் 10 ஆண்டுகள் வரை ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையே தான் டிடிஎப் வாசன் தொடர்ந்து ஜாமீன் கோரி வந்தார். காஞ்சிபுரம் கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 1ம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து நேற்று சென்னை புழல் சிறையில் இருந்து டிடிஎப் வாசன் வெளியே வந்தார். சுமார் 45 நாட்களுக்கு பிறகு அவர் விடுதலையானார்.

டிடிஎப் வாசனை அவரது தாயார், நண்பர்கள் வரவேற்றனர். அதன்பிறகு காரில் அவரை அங்கிருந்து வீட்டுக்கு அழைத்து சென்றனர். வீடு திரும்பிய டிடிஎப் வாசனை அவரது தாய் வரவேற்ற சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதாவது டிடிஎப் வாசன் வீடு திரும்பியபோது வீட்டுக்கு வெளியே அமர வைக்கப்பட்டார். இதையடுத்து அவரது தலையில் எண்ணெய் வைத்து தாய் குளிப்பாட்டினார். அதன்பிறகு இன்னொரு பெண் டிடிஎப் வாசனுக்கு ஆர்த்தி எடுத்து திலகமிட்டார். அதன்பிறகு டிடிஎப் வாசன் வீட்டுக்குள் சென்றார்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications