பிறந்தநாள் விழாவில் இளைஞர் மரணம்! உடல் உறுப்பில் படிந்திருந்த மர்ம பொருள்! மனைவி, மாமனார் கைது!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் கடந்த ஆண்டு மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அவர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டது தடய அறிவியல் சோதனையில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரது மனைவி மற்றும் மாமனாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Agra Mystery Death Case

ஆக்ரா டிரான்ஸ் யமுனா பகுதியைச் சேர்ந்த யதேந்திர பால் சிங் (28), கடந்த நவம்பர் 14-ம் தேதி தனது மனைவி ஜோதியின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காகக் கமலா நகரில் உள்ள மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார். விழாவின் போது மது அருந்திய யதேந்திரா, திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்தார்.

தடய அறிவியல் ஆய்வில் வெளியான உண்மை

ஆரம்பத்தில் மரணத்திற்கான காரணம் தெரியாத நிலையில், யதேந்திராவின் உடல் உறுப்பு மாதிரிகள் (Viscera) ரசாயனப் பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன் முடிவில், அவரது உடலில் அலுமினியம் பாஸ்பைடு (சல்பாஸ்) எனப்படும் வீரியமிக்க விஷம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. மதுபானத்தில் இந்த விஷத்தைக் கலந்து அவருக்குக் கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

நீதிமன்ற உத்தரவால் அதிரடி நடவடிக்கை

யதேந்திராவின் தாய் மஞ்சு ராணி, தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்ற உத்தரவின்படி, யதேந்திராவின் மனைவி ஜோதி, மாமனார் மகேந்திர சிங் செங்கர், மாமியார் ஷிவானி மற்றும் மைத்துனர் ரிஷப் ஆகிய 4 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

காவல்துறை விசாரணை மற்றும் கைது

இந்தக் கொலை தொடர்பாகத் துணை ஆணையர் சையத் அலி அப்பாஸ் கூறுகையில், "திட்டமிட்டபடி யதேந்திராவின் குளிர்பானத்தில் விஷம் கலந்து அவரைக் கொன்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அவரது மனைவி ஜோதி மற்றும் மாமனார் மகேந்திர சிங் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளோம்," என்றார்.

சட்டப்பிரிவுகள்

கைது செய்யப்பட்டவர்கள் மீது பாரதிய நியாய சம்ஹிதா (BNS) பிரிவு 103(1)-ன் கீழ் (கொலை வழக்கு) வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மற்ற இருவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

மனைவியின் பிறந்தநாள் அன்றே கணவருக்கு விஷம் வைத்துக் கொல்லப்பட்ட இச்சம்பவம் ஆக்ராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலைக்கான சரியான காரணம் குறித்துப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+