அடக்கொடுமையே! உங்க சண்டையில் எம்ஜிஆர், ஜெ. சமாதியை மறந்துட்டீங்களே..அதிமுக தொண்டர்கள் ஆதங்கம்!
சென்னை: அதிமுகவின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் பொதுக்குழுவுக்கு செல்வதற்கு முன்பாக அக்கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர், அக்கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா நினைவிடங்களுக்கு யாருமே சென்று மரியாதை செலுத்தாதது அதிமுக தொண்டர்களிடையே ஆதங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
தமிழகத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளிலும் ஏதேனும் மிக முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் நாட்களில் அக்கட்சிகளின் தலைவர்கள் நினைவிடங்களும் முக்கியத்துவம் பெறும். திமுக என்றால் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கும் அதிமுக என்றால் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கும் அக்கட்சிகளின் தலைவர்கள் சென்று மரியாதை செலுத்துவது வழக்கம்.

தலைவர்கள் நினைவிடங்கள்
அதேபோல் சட்டசபை மானிய கோரிக்கை, கட்சியின் அதிமுக்கிய தீர்மானங்கள் ஆகியவற்றை இந்த தலைவர்களின் நினைவிடங்களின் வைத்து வணங்கி எடுத்துவிட்டுச் செல்வதும் ஒரு வழக்கமாகவே இருந்து வருகிறது. இதனால் தலைவர்களின் பிறந்த நாள், நினைவுநாள் தவிர இத்தகைய முக்கிய தருணங்களிலும் இந்நினைவிடங்கள் முக்கியத்துவம் பெறும்.

தர்மயுத்த இடம்
அதிமுகவைப் பொறுத்தவரை ஜெ.நினைவிடம் என்பது ஒரு கலகக் குரலுக்கான இடமாகப் போய்விட்டது. அதிமுகவினரின் வார்த்தைகளில் சொன்னால் தர்மயுத்த அரங்கமாகிவிட்டது. சசிகலாவை எதிர்த்து ஓபிஎஸ் தர்மயுத்தத்தை தொடங்கிய இடம் ஜெ.நினைவிடம்தான். தமிழகத்தையே ஒரு பின்னிரவில் திரும்பிப் பார்க்க வைத்தார் ஓபிஎஸ் தமது தர்மயுத்தம் மூலம்.

அதிமுக குழப்பம்
தற்போது அதிமுகவில் உச்சகட்ட குழப்பம் நடைபெற்று வரும் நிலையிலும் ஜெ.வின் சமாதி முக்கிய இடமாக பார்க்கப்பட்டது. அதிமுகவில் தம்மை ஓரம் கட்டி, பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றப் போகிறார் என்பதால் கொந்தளித்து போனார் ஓபிஎஸ். இதையடுத்து அதிமுக பொதுக்குழுவையே நடத்தவிடாமல் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுப் பார்த்தார் ஓபிஎஸ். இதன் ஒருபகுதியாகவே ஜெ. சமாதிக்கு ஓபிஎஸ் செல்வார் என கூறப்பட்டது.

தொண்டர்கள் ஆதங்கம்
ஆனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்தான் நேற்று ஜெ.சமாதிக்கு போனார்கள். அங்கே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆவேசமாக முழக்கங்களை எழுப்பினர். எப்படியும் ஓபிஎஸ் வந்துவிடுவார் என காத்திருந்த ஆதரவாளர்களுக்கு கடைசியில் ஏமாற்றம்தான் மிஞ்சியது.
இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இன்று பொதுக்குழு நடைபெறுகிறது. ஆனால் பொதுக்குழுவுக்கு செல்வதற்கு முன்பாக ஓபிஎஸ், ஈபிஎஸ் என எந்த ஒரு கோஷ்டியும் எம்ஜிஆர், ஜெ. நினைவிடங்களை மறந்தும் கூட எட்டிப்பார்க்கவில்லை. எப்படியும் தலைவர்கள் இங்கே வருவார்கள் என காத்திருந்த அதிமுக தொண்டர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். உங்க சண்டையில் எங்க தலைவர்களை தூக்கிப் போட்டுவிட்டீங்களே.. எம்ஜிஆர், ஜெ.நினைவிடங்களில் இன்னமும் காத்திருக்கும் அதிமுக தொண்டர்கள் குமுறுகின்றனர்.
-
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இடைத்தேர்தலில் அதிமுகவை காப்பாற்ற வேறு வழியில்லை.. எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications