வலிமையான தலைமை இல்லை.. அதிமுக சரிந்து கிடக்க இதுதான் காரணம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சென்னை: அதிமுகவுக்கு வலிமையான தலைமை அமையாததால் நான்கு பிரிவுகளாக சரிந்து கிடப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னையில் திமுகவின் 15வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திமுகவின் தலைவராக 2வது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து திமுகவின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்து பேசினர். பின்னர் இறுதியாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசினார்.

மு.க.ஸ்டாலின்
அவர் பேசுகையில், புதிய நிர்வாகிகள் பலர் பொறுப்புகளுக்கு வந்துள்ளார்கள். பழைய நிர்வாகிகள் பலர் இருப்பீர்கள். கடமையை செய்ய காலம் ஒரு கொடையாக இந்த பொறுப்பை உங்களுக்கு வழங்கி உள்ளது. தொடர்ச்சியாக கூட்டங்களை நடத்துங்கள். கூட்டங்களை நடத்துவதுதான் கழகத்தை வலிமைப்படுத்தும். அனைவரும் சேர்ந்து கழகத்தை வலிமைப்படுத்த வேண்டும். தனி மனிதரை விட கழகம் தான் பெரியது.

எனது கடமை
அதிக மழை பெய்தாலும், மழை பெய்யாவிட்டாலும் என்னைதான் குறை சொல்வார்கள். பல் முனை தாக்குதல்களுக்கு பதில் சொல்ல கடமை பட்டவன் நான். ஒரு பக்கம் திமுக தலைவர் மறு பக்கம் தமிழ்நாடு முதல்வர். மத்தளத்திற்கு இரண்டும் பக்கம் அடி என்பது போல் உள்ளது எனது நிலைமை. இத்தகைய சூழலில் உள்ள என்னை மேலும் துன்பப்படுத்தும் வகையில் மூத்தவர்கள் ,அமைச்சர்கள் நடந்து கொண்டால் நான் யாரிடம் கூறுவது.

நாடாளுமன்றத் தேர்தல்
சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். நமது கவனத்தை திசை திருப்புவது தான் எதிரிகளின் ஒரே நோக்கம். திராவிட மாடல் என்ற சொல்லே, இந்தியாவின் கவனத்தை ஈர்த்துவிட்டது. நமது நிதி நிலைமை மட்டும் சீராக இருந்திருந்தால், இன்னும் பல திட்டங்களை செயல்படுத்தி இருப்போம். இது முக்கியமான கால கட்டம். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டு உள்ளது. யாரும் மெத்தனமாக இருக்க கூடாது. 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும்.அடுத்த சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு இதுதான் அடித்தளம்.

பாஜக மீது விமர்சனம்
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பாஜக எதையும் செய்யும். எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கீழ் தனமான அரசியலுக்கும் செல்வார்கள். மதத்தை, ஆன்மிக உணர்வை தூண்டி அரசியல் செய்ய பார்க்கிறது பாஜக. அரசியலையும், ஆன்மிகத்தையும் எப்போதும் இணைக்காதவர்கள் தமிழக மக்கள் என்பதால்தான் தமிழ்நாட்டில் மூச்சு திணறுகிறது பாஜக. அதிமுகவின் கோஷ்டி பூசலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி குளிர்க்காயப் பார்க்கிறது.

அதிமுக பற்றி ஸ்டாலின்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக கலகலத்துக் கிடக்கிறது. உறுதியான, வலிமையான தலைமை அதிமுகவுக்கு அமையாததால், அதிமுக நான்கு பிரிவுகளாக சரிந்து கிடக்கிறது. திமுகவை எதிர்ப்பதை விட அதிமுகவிற்கு எந்த காலத்திலும் வேறு கொள்கை இல்லை. அதனால்தான் இன்று உணர்ச்சி இழந்து கிடக்கிறது. எந்தக் கட்சியாக இருந்தாலும் தகுதியான தலைமையும், வலிமையான கொள்கையும் இருந்தால் மட்டுமே வெல்லும். அதற்கு எடுத்துக்காட்டாக திமுக உள்ளது.

பணிகளை தொடங்குங்கள்
சாதனைகளை எடுத்து சொல்ல முடியாத பாஜகவும், சரிந்தும் சிதைந்தும் கிடக்கும் அதிமுகவும் தேர்தல் களத்தில் பொய் பரப்புகளை கட்டவிழ்த்து விடுவார்கள். அதற்கு நமது சாதனைகளை பதிலாக சொல்ல வேண்டும். 40க்கு 40 என்று நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவோம். அதற்காக நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைக்கும் பணியை இப்போதே துவங்க வேண்டும். அடுத்த இரண்டு மாதத்திற்குள் இந்தப் பணியை முடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
திமுக கூட்டணியில் 7 சீட்டா? எந்தெந்த தொகுதிகள்? நாளை மேஜர் மீட்டிங்.. இறுதி முடிவெடுக்கும் விசிக! -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
என்னை முதல்வராக்கினால்! பெண்களுக்கு ரூ 1 லட்சம்! ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ பேச்சால் கோபத்தில் தலைமை -
Election Exclusive: கூட்டணியில் ’சிவப்பு’ சிக்னல்.. தோழர்களை கூலாய் ஹேண்டில் செய்யும் ஸ்டாலின்! பரபரப்புக்களுக்கு எண்ட்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்! -
"6 தொகுதிகளிலும் ஜெயித்திருப்போம்!" 2021 தேர்தல் குறித்து சிபிஎம் பெ.சண்முகம் அதிரடி விளக்கம்! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு?












Click it and Unblock the Notifications