தேர்தல் ஆணையம், சுப்ரீம் கோர்ட்.. ஓபிஎஸ் கோஷ்டியின் பாய்ச்சல்..எதுவும் நடக்காதோ பீதியில் ஈபிஎஸ் அணி!
சென்னை: அதிமுகவில் தமது ஒருங்கிணைப்பாளர் பதவியை தக்க வைக்க தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம் என அடுத்தடுத்து ஓபிஎஸ் கோஷ்டி பாய்ந்திருப்பதால் தாங்கள் நினைத்தது எதுவுமே நடக்காதோ என்ற அச்சத்திலும் பீதியிலும் ஈபிஎஸ் அணி இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் உட்கட்சி மோதல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. ஈபிஎஸ் அணியைப் பொறுத்தவரை ஜூலை 11-ல் பொதுக்குழு நடத்துவது; அதில் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுச்செயலாளராக மகுடம் சூட்டுவது என்பதில் உறுதியாக இருக்கிறது. இதற்காக அத்தனை வியூகங்களையும் வகுத்து செயல்பட்டு வருகிறது எடப்பாடி பழனிசாமி கோஷ்டி.

ஓபிஎஸ் அணி வியூகம்
ஆனால் ஓபிஎஸ் அணியோ, ஜூலை 11 பொதுக்குழுவை எப்படியாவது தடுத்து நிறுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்காக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறது ஓபிஎஸ் கோஷ்டி. அத்துடன் நிற்காமல் தேர்தல் ஆணையத்திலும் ஓபிஎஸ் அணி மனு கொடுத்துள்ளது.

ஈபிஎஸ் கோஷ்டி அதிர்ச்சி
ஓபிஎஸ் அணி அடுத்தடுத்து மேற்கொண்டு வரும் சட்ட நடவடிக்கைகளை எதிர்பார்க்காத ஈபிஎஸ் கோஷ்டி ரொம்பவே அதிர்ச்சி அடைந்துள்ளதாம். தாங்கள் திட்டமிட்டபடி ஜூலை 11-ல் பொதுக்குழு நடைபெறாமல் போனால் தங்களுக்கு பெரும் பின்னடைவு என்றும் பொதுச்செயலாளர் பதவிக்காக இவ்வளவு மெனக்கெட்டது அத்தனையுமே வீணாகிவிடுமோ எனவும் ஈபிஎஸ் கோஷ்டி கடும் உளைச்சலுக்குள்ளாகி இருக்கிறதாம். இதனை வெளிப்படுத்தும் வகையிலேயே ஈபிஎஸ் அணி உச்சநீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீட்டு மனுவையும் தாக்கல் செய்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் அப்பீல்
அதாவது ஜூன் 23-ந் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமி கோஷ்டிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்தது. பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் தவிர புதிதாக தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது; அதிமுக சட்டவிதிகளில் திருத்தம் கொண்டுவரக்கூடாது என்பது உயர்நீதிமன்றத்தின் உத்தரவு. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்துதான் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கட்சிகளின் பொதுக்குழு, செயற்குழு விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது; பொதுக்குழு, செயற்குழு முடிவுகளை நீதிமன்றங்கள் கட்டுப்படுத்தாது எனவும் அதில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது.

முடங்குமோ அத்தனையும்
ஓபிஎஸ், ஈபிஎஸ் இருதரப்பின் அடுத்தடுத்த சட்ட போராட்டங்கள் அதிமுக தொண்டர்களை பெரும் கவலையடைய வைத்துள்ளது. இதே நிலைமை நீடித்தால் அதிமுக கட்சி என்ற பெயர், அதிமுக தலைமை அலுவலகம், இரட்டை இலை சின்னம் அத்தனையும் முடங்கும் நிலைதான் உருவாகும்; இது அதிமுகவுக்கு மிகப் பெரும் பலவீனமாகிவிடும் என்பது தொண்டர்களின் கவலை.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications