விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன?
சென்னை: தமிழக அரசியலில் அடுத்த பெரிய அரசியல் சோதனையாக பார்க்கப்படும் ஐந்து சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, அதிமுக தனது தேர்தல் பணிகளை வேகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்த தேர்தலை கவுரவப் பிரச்சினையாக கருதும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தற்போதிலிருந்தே வேட்பாளர் தேர்வு பணிகளில் நேரடியாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக அமர்ந்தது. ஆனால் தேர்தலுக்குப் பிறகு கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் அரசியல் மாற்றங்கள் காரணமாக சில எம்.எல்.ஏக்கள் கட்சியில் இருந்து விலகினர்.

அதன்பின்னர் பெருந்துறை, தாராபுரம், மதுராந்தகம் மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதிகளைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இதனுடன் முதல்வராக பதவியேற்ற பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவியை விஜய் ராஜினாமா செய்ததால், மொத்தம் ஐந்து தொகுதிகள் காலியாகின.
இடைத்தேர்தல்
இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதில் குறிப்பாக அதிமுகவுக்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு, கட்சிக்குள் உருவான பிரிவினை, தொடர்ந்து தவெகவுக்கு சென்ற முன்னாள் நிர்வாகிகள் உள்ளிட்ட காரணங்களால் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியின் தலைமை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
எடப்பாடி பழனிசாமி
இந்த சூழலில் இடைத்தேர்தலில் கணிசமான வெற்றியை பதிவு செய்து கட்சியின் வலிமையை மீண்டும் நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்காக முதற்கட்டமாக கொங்கு மண்டலத்தில் உள்ள தாராபுரம் மற்றும் பெருந்துறை தொகுதிகள் மீது அதிமுக சிறப்பு கவனம் செலுத்தி வருகிறதாம். இந்த இரண்டு தொகுதிகளிலும் கட்சிக்கு வலுவான அமைப்பு இருப்பதால், வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கட்சி தலைமையினர் நம்புகின்றனர்.
அதிமுக வேட்பாளர்கள்
அதனால், அந்த பகுதிகளில் நன்கு அறிமுகமானவர்கள், பொருளாதார ரீதியாக வலுவானவர்கள், கட்சிக்குள் ஏற்றுக்கொள்ளப்படும் முகங்கள் என பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் வேட்பாளர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. முதல் கட்டமாக ஆறு பேரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் திருச்சி கிழக்கு தொகுதிக்கும் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளரை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பாமக
நகர்ப்புற வாக்காளர்கள் அதிகம் உள்ள இந்த தொகுதியில் புதிய முகமா அல்லது அனுபவம் வாய்ந்த தலைவரா என்பதில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. கூட்டணி அரசியலையும் அதிமுக கவனத்தில் எடுத்துள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது மதுராந்தகம் தொகுதியை பாமக கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது அதிமுக சார்பில் மரகதம் குமரவேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால் அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.
பாஜக
ஆனால் தற்போதைய அரசியல் சூழலில் கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில் மதுராந்தகம் தொகுதியை பாமகவுக்கும், அம்பாசமுத்திரம் தொகுதியை பாஜகவுக்கும் ஒதுக்கும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதன் மூலம் கூட்டணி கட்சிகளை திருப்திப்படுத்துவதோடு, இடைத்தேர்தலில் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி வாக்குகளை பெறலாம் என அதிமுக கணக்கிட்டு வருவதாக கூறப்படுகிறது.
தவெக
வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன், அவர்களை உடனடியாக களத்தில் இறக்கி வீடு தோறும் பிரசாரம், வாக்காளர் சந்திப்பு, நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உள்ளிட்ட தேர்தல் பணிகளை தொடங்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசியலில் தற்போது ஆளுங்கட்சியான தவெகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் நேரடியாக பலப்பரீட்சை நடத்தும் முதல் தேர்தலாக இந்த இடைத்தேர்தல் பார்க்கப்படுகிறது. எனவே, இந்த தேர்தலின் முடிவு ஐந்து தொகுதிகளின் வெற்றியை மட்டுமல்லாமல், எடப்பாடியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான நிகழ்வாக அமைந்துள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications