பொங்கலுக்கு ரூ.5 ஆயிரம் வழங்குங்க ஸ்டாலின்.. தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வைத்த வேண்டுகோள்!
சென்னை: தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு ரூ.5 ஆயிரம் பரிசாக வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் வைத்துள்ளார். அதிமுக ஆட்சியின் போது ரூ.2,500 வழங்கப்பட்டதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, திமுக கார்ப்பரேட் கம்பெனியாக மாறிவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ரேஷன் கடைகளில் பரிசுப்பொருட்கள் வழங்கப்படும். வேட்டி, சேவை, கரும்பு, பொங்கல் வைப்பதற்கான பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு அளிக்கப்படும். முன்னதாக அதிமுக ஆட்சியில் ரூ.2500 பரிசுத் தொகையாகவும் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது பரிசுப்பொருட்கள் மட்டுமே அளிக்கப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், தமிழக அரசு ரேஷன் கார்டுகளுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
அதில் எடப்பாடி பழனிசாமி, திமுக என்பது கார்ப்பரேட் கம்பெனி. ஆனால் அதிமுக ஜனநாயக இயக்கம். கட்சிக்காக உழைக்கும் யாரும் பதவிக்கு வர முடியும். திமுக போல் அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது. எனக்கு பின்னாலும் எத்தனை ஆண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காக இயங்கும் என்று ஜெயலலிதா கூறினார். அதனை நிரூபிக்கும் வகையில் நாம் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும்.
திமுக எவ்வளவோ கொள்ளையடித்து வைத்துள்ளது. இந்த தைப் பொங்கலுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். அதிமுக ஆட்சியின் போது ரூ.2,500 வழங்கப்பட்டது. அப்போது ஸ்டாலின், ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இப்போது நான் கோரிக்கையாக வைக்கிறேன். அதேபோல் 2026ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் நல்ல கூட்டணி அமையும்.
அதிமுக எப்போதும் சொந்த பலத்தை நம்பி இருக்கும் கட்சி.. திமுக பலம் இழந்துவிட்டது. அதன் காரணமாகவே கூட்டணியை நம்பி இருக்கிறார்கள். தேர்தல் நெருங்கும் போது கூட்டணி அமைப்போம். நிச்சயமாக அருமையான கூட்டணி அமையும். 210 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றும் ஆட்சி அமைக்கும். கூட்டணிக்கு அதிமுகவே தலைமை தாங்கும் என்று தெரிவித்தார்.
-
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்! -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஒரேயொரு இஸ்லாமியர்.. 150 பேர் லிஸ்டில் ஒருவருக்கு மட்டுமே சீட்! -
"சிதமுக-விற்கு லக்".. அதிமுக கூட்டணியில் புதிய கட்சி.. ஒரு தொகுதியை ஒதுக்கிய எடப்பாடி பழனிச்சாமி! -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்!












Click it and Unblock the Notifications