சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடிகை ராதா விவகாரம்... எல்லாத்துக்கும் காரணமே அந்த அதிமுக 'தல'தான்.. கண்ணீர் வடித்த எஸ்.ஐ. கணவர்

Google Oneindia Tamil News

சென்னை: சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதா விவகாரத்துக்கு காரணமே சென்னை அதிமுக பிரமுகர் ஒருவரின் தலையீடுதான் என அவரது 2-வது கணவரான சப் இன்ஸ்பெக்டரில் விசாரணையின் போது கண்ணீருடன் கூறினாராம்.

நடிகை ராதா, தமது 2-வது கணவரான சப் இன்ஸ்பெக்ட்ர் தம்மை அடித்து துன்புறுத்துவதாக போலீசில் புகார் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே... நீ 'காமெடி’க் கதாநாயகன் - வைரமுத்து இரங்கல் அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே... நீ 'காமெடி’க் கதாநாயகன் - வைரமுத்து இரங்கல்

இந்த விசாரணைக்கு வடசென்னையில் பணிபுரியும் அந்த 2-வது எஸ்.ஐ. கணவர் ஆஜராகி நடந்ததை கண்ணீர் மல்க விவரித்தாராம். ஏற்கனவே ஒருவருடன் திருமணமாகி குழந்தையுடன் விலகி வந்தவர் நடிகை ராதா.

ராதாவுடன் எப்படி பழக்கம்?

ராதாவுடன் எப்படி பழக்கம்?

தாம் தென்சென்னையில் ஒரு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த போது ராதா பழக்கமானார்; அவருடன் நெருக்கமாகி பழகியதால் தம்மை திருமணம் செய்தாக வேண்டும் என நெருக்கடி கொடுத்தார். தமக்கு ஏற்கனவே திருமணமாக்கி இருப்பதை எடுத்துச் சொல்லியும் ராதா கேட்கவில்லை.

ராதா மீது சந்தேகம்

ராதா மீது சந்தேகம்

இதனால் ராதாவை 2-வது திருமணம் செய்து சாலிகிராமத்தில் குடி வைத்தேன். வடசென்னையில் ஒரு குடும்பம், சாலி கிராமத்தில் ஒரு குடும்பம் என இருந்த தமக்கு ராதாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. அவர் சினிமாவில் நடித்த காலம் முதலான தொடர்புகள் எதனையுமே இன்னமும் விடவில்லை என்பதால் இருவருக்கும் சண்டை வரும்.

அதிமுக பிரமுகர் தலையீடு

அதிமுக பிரமுகர் தலையீடு

அதிலும் சென்னையில் மையமான பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவரால்தான் இவ்வளவும் பிரச்சனையே. அவர்தான் ராதாவுக்கும் தமக்கும் இடையே பிரச்சனைக்கு காரணமானவர். அவருடன் எத்தனையோ முறை மோதியும் பார்த்துவிட்டேன். ஆளும் கட்சிக்காரராக இருந்தால் என்னால் எதுவுமே செய்யவில்லை.

ஏன் பிரச்சனை?

ஏன் பிரச்சனை?

இப்படியான நிலையில் ஹைதராபாத்தில் இருந்து வந்த ராதாவின் தாயாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால்தான் தம் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என கண்ணீரை அடக்க முடியாமல் விம்மியபடி கூறினாராம் எஸ்.ஐ. போலீஸ் விசாரணையில் சப் இன்ஸ்பெக்டர் கண்ணீர் வடித்த விவகாரம்தான் சென்னை போலீசில் இப்போது ஹாட் டாபிக்.

English summary
Sources said that AIADMK Man involved in Actress Radha Family dispute.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X