அடுத்த விக்கெட் போச்சு! ராஜினாமா செய்தார் அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர்! விழிபிதுங்கும் இபிஎஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விராலிமலை தொகுதியின் எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த கடிதத்தை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஏற்றுக் கொண்டார். அதிமுகவில் இருந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து சபாநாயகர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சட்டசபை விதி என் 21-இன்படி விராலிமலை சட்டசபை தொகுதி உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் தனது பதவி விலகல் கடிதத்தை தம் கைப்பட எழுதி என்னிடம் அளித்துள்ளார்.

c vijayabaskar

அவர் அளித்த பதவி விலகல் கடிதம் சட்டசபை பேரவை விதி 22-இன் படி முறையாக உள்ளதால் அதை நான் ஏற்கிறேன் என அந்த ராஜினாமா ஏற்பு கடிதத்தில் ஜேசிடி பிரபாகர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்தியபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகிய 4 பேர் ஏற்கெனவே தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துவிட்டனர்.

சி.விஜயபாஸ்கர், எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த நிலையில் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அதிமுக எம்எல்ஏக்களின் பலம் 42 ஆக குறைந்துள்ளது. ஏற்கெனவே திருச்சி கிழக்கு உள்ளிட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலையில் விஜயபாஸ்கர் ராஜினாமாவால் விராலிமலை தொகுதியும் சேர்ந்து 6 தொகுதிகள் காலியாகிவிட்டது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவாக சி.விஜயபாஸ்கர் வாக்களித்தார். 2026 சட்டசபை தேர்தலுக்கு பிறகு அதிமுக இரண்டாக பிரிந்தது. அதாவது தொடர் தேர்தல் தோல்விக்கான காரணத்தை எடப்பாடி பழனிசாமி ஆராயவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்து எஸ்பி வேலுமணி- சி.வி.சண்முகம் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் செயல்பட்டனர்.

அவர்கள் எல்லோரும் எடப்பாடி பழனிசாமி தரப்பின் கொறடா உத்தரவை மீறி தவெகவுக்கு ஆதரவு அளித்தனர். இதையடுத்து தவெகவுக்கு ஆதரவு அளித்தவர்களின் மாவட்டச் செயலாளர்கள் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்துவிட்டு, புதியவர்களை நியமித்தார்.

விஜய் அமைச்சரவையில் இடம் பெறுவதற்காகவே தவெகவுக்கு இவர்கள் ஆதரவளித்ததாக எடப்பாடி குற்றம்சாட்டியிருந்தார். பின்னர் தவெக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது அதிமுகவினர் யாருக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் எஸ்பி வேலுமணி தரப்பினர் திடீரென எடப்பாடி பழனிசாமி பக்கம் திரும்பி சென்றனர். இவர்களில் சி.விஜயபாஸ்கரும், சி.வி.சண்முகமும் எடப்பாடி பழனிசாமி பக்கம் செல்லாமல் தனியாக செயல்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் இருவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தனது அடுத்த கட்ட நகர்வு குறித்து தொகுதிமக்களிடமும் ஆதரவாளர்களிடமும் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தியிருந்தார்.

அவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதன்படி செயல்படுவேன் என தெரிவித்திருந்தார். தற்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அடுத்து விஜயபாஸ்கர் இணைய போவது தவெகவிலா, திமுகவிலா என்ற கேள்வி எழுந்துள்ளது.

யார் இவர்?

இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) கட்சியைச் சேர்ந்தவர்.

முன்னாள் அமைச்சர்: கடந்த 2013 முதல் 2021 ஆம் ஆண்டு வரை தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை (சுகாதாரத்துறை) அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர்: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் இருந்து 2011, 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக (எம்.எல்.ஏ) தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன்பு 2001 ஆம் ஆண்டு புதுக்கோட்டை தொகுதியிலிருந்தும் எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். 2006 ஆம் ஆண்டு விஜயபாஸ்கர் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. கொரோனா காலத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் அனைவரும் பாராட்டும்படியாக பணியாற்றினார். கொரோனா பரவலை பெருமளவில் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை அவர் எடுத்தார்.

கல்வி மற்றும் சொந்த ஊர்: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரைச் சேர்ந்த இவர், எம்.பி.பி.எஸ் (MBBS) முடித்த ஒரு மருத்துவர் ஆவார். இவருக்கு ரம்யா என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+