கேரள உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் அதிமுக வேட்பாளர்கள்.. பொறுப்பாளர்களை நியமித்த எடப்பாடி!
சென்னை: கேரள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கேரளா மாநிலத்தில் வரும் டிசம்பர் 9 மற்றும் 11 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தேவிகுளம், மூணாறு, குமுளி, பறையூர், வட்டவடை, காந்தலூர், சின்னகானல், அகழி, சோலையூர், நெய்யாற்றிங்கரா, திருவனந்தபுரம் பகுதிகளில், உள்ளாட்சி பதவி இடங்களுக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த இடங்களில் தேர்தல் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம். ஆனந்தன் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.















Click it and Unblock the Notifications