எய்ம்ஸ் எனும் 8 வது உலக அதிசயம்.. மதுரைக்கு எப்போது வரும்? மோடிக்கு ஸ்டாலின் கேள்வி!
சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் வர இருப்பதால்.. பிரதமர் நரேந்திர மோடியை அடிக்கடி இந்த பக்கம் எதிர்ப்பார்க்கலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
காஞ்சிபுரத்தில், நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், மோடி மீதும், பாஜக மீது சரமாரியான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது,

"பிரதமர் மோடி தமிழ்நாடு வரும்போது.. அவருக்கு சில கேள்விகளை கேட்க தோன்றுகிறது. 3548 கோடி கல்வி நிதி எப்போது வரும்? தொகுதி மறுவரையில் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்று உறுதி எப்போது வரும்? ஆளுநர் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்? தமிழுக்கான நிதி ஒதுக்கீடு எப்போது உயர்த்தப்படும்? 100 நாள் வேலை திட்டத்திற்கு எதிராக.. புதிய வேலை திட்டம் கொண்டுவரப்பட்டதே அது எப்போது கைவிடப்படும்? எய்ம்ஸ் எனும் 8 வது உலக அதிசயம் மதுரைக்கு எப்போது வரும்?" என கேள்வி எழுப்பியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications