மே 4-ம் தேதி முதல் விமான டிக்கெட் முன்பதிவு செய்யலாம்... ஏர் இந்தியா அறிவிப்பு
சென்னை: மே 4-ம் தேதி முதல் உள்நாட்டு விமானங்களில் செல்வதற்கு டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம் என ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் லாக்டவுன் கொண்டுவரப்பட்டதால் விமானம், ரயில், பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவில் மே 3-ம் தேதியோடு ஊரடங்கு முடிவுக்கு வருவதால் மே 4-ம் தேதி முதல் உள்நாட்டு விமான டிக்கெட் முன்பதிவை தொடங்குவதாக தெரிவித்துள்ளது ஏர் இந்தியா.

மேலும், ஜூன் 1-ம் தேதி முதல் சர்வதேச விமானங்களில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என ஏர் இந்தியா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உள்நாட்டு விமான டிக்கெட் முன்பதிவை தொடங்க ஏர் இந்தியா அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், மே 3-ம் தேதிக்கு பிறகு மத்திய அரசு எந்த மாதிரியான முடிவுகளை எடுக்கவுள்ளது எனத் தெரியவில்லை.
இதனிடையே வேறு எந்த விமான நிறுவனங்களில் இருந்தும் டிக்கெட் முன்பதிவு செய்வது தொடர்பான எந்த அறிவிப்புகளும் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பீதி காரணமாக குறைந்தது இன்னும் ஒரு மாதத்திற்காவது விமானம், ரயில், பேருந்து உள்ளிட்டவற்றில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications