கருகிப் போன சவுந்தர்யா.. சரிந்த ராஜசேகர ரெட்டி! பிரபலங்களை காவு வாங்கிய விமான விபத்துகள்! ரிவைண்ட்!
சென்னை: அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் அதில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மிக கோரமான விபத்தில் விஸ்வாஸ் குமார் மட்டுமே உயிர் பிழைத்து இருக்கிறார். இந்த நிலையில் இதுவரை நடந்த விமானம் மற்றும் ஹெலிகாப்டர் விபத்துகளில் உயிரிழந்த பிரபலங்கள் குறித்து பார்க்கலாம்..
கடந்த 12ம் தேதி குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்துக்கு சொந்தமான போயிங் 787 விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த விமானிகள் பணிப்பெண்கள், பயணிகள் உள்ளிட்ட 241 பேர் உயிரிழந்தனர்.
விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்ற ஒரே ஒரு பயணி மட்டுமே உயிர் பிழைத்தார். உலகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் இதற்கு முன்பு நடந்த விமான விபத்துக்கள் குறித்து அறிந்து கொள்ளவும் இணையத்தில் ஆர்வம் காட்டுகின்றனர்.

அந்த வகையில் ஆந்திரா முன்னாள் முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர் ரெட்டி, நடிகை சௌந்தர்யா, ராணுவ தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட பலர் உயிரிழந்திருக்கிறார்கள். அந்த துயர சம்பவங்கள் குறித்து சற்று சுருக்கமாக பார்க்கலாம்..

நடிகை சௌந்தர்யா
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர் சௌந்தர்யா. தமிழில் கமலஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். சௌமியா என்ற இயற்பெயர் கொண்ட இவர், கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி கர்நாடகாவில் பெங்களூருவில் இருந்து சென்றபோது நடந்து ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். அதில் சௌந்தர்யாவும் அவரது சகோதரரும் பலியாகினர். அப்போது சௌந்தர்யா பாஜகவுக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி
ஆந்திர மாநிலம் ஆந்திரா, தெலுங்கானா என பிரிக்கப்படுவதற்கு முன்பு ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி. ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை. கடந்த 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹெலிகாப்டரில் சென்றபோது மோசமான வானிலை காரணமாக வனப்பகுதியில் நடந்த விபத்தில் சிக்கி பலியானார். அதனை தொடர்ந்து காங்கிரஸிலிருந்து விலகிய ஜெகன்மோகன் ரெட்டி தனது தந்தை பெயரில் ஒய்எஸ்ஆர் காங்கிரசை ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.

சஞ்சய் காந்தி
இந்தியா சந்தித்த மிகப்பெரிய விமான விபத்து பலியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது சஞ்சய் காந்தியின் மரணம் தான். காங்கிரஸ் தலைவராகவும் பிரதமராகவும் இருந்த இந்திரா காந்தியின் மூத்த மகன் தான் இந்த சஞ்சய் காந்தி. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சகோதரர். 1980 ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி ஹெலிகாப்டரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து வெடித்து சிதறியது. அப்போது அதனை இயக்கிய சஞ்சய் காந்தி 33 வயதில் பலியானார்.

ஹோமி பாபா
இந்தியாவின் அணுசக்தியின் தந்தை என அழைக்கப்படுபவர் அணு விஞ்ஞான ஹோமி ஜாங்கிர் பாபா. 1966 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் தேதி சர்வதேச மாநாடு ஒன்றில் பங்கேற்க ஐரோப்பிய நாடான பிரான்சுக்கு சென்றிருந்தார். டாங்க் பகுதியில் இவர் சென்ற விமான வெடித்து சிதறி உயிரிழந்தார். அந்த சம்பவம் இந்தியா மட்டுமல்லது உலகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பிபின் ராவத்
இந்திய ராணுவத்தின் முப்படைகளும் இணைக்கப்பட்டு ஒரு தலைமை தளபதியின் கீழ் கொண்டு வரப்பட்டது. அப்படி முதல் தலைமை தளபதியாக பொறுப்பேற்றவர் ஜெனரல் பிபின் ராவத். தமிழகத்தின் சூளூரில் இருந்து ஊட்டி வெலிங்கடனுக்கு ராணுவ ஹெலிகாப்டரில் சென்றார் அப்போது திடீரென மலையில் மோதி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் பிபின் ராவத் உள்ளிட்ட அனைவருமே பலியாகினர்.
பிற பிரபலங்கள்
இது மட்டுமில்லாமல் காங்கிரஸின் மூத்த தலைவரும் விமான போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த மாதவராஜ் சிந்தியா, லோக்சபா சபாநாயகர் பால யோகி, பிரபல தொழிலதிபரும் ஹரியானா அமைச்சருமான ஓம் பிரகாஷ் ஜின்டால், அருணாச்சல பிரதேசத்தின் முதல்வர் ஜோர்ஜே காண்டு ஆகியோரும் விமான விபத்தில் சிக்கி பலியான பிரபலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications