Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனா முடியும் வரை காணொளி காட்சி மூலமாக மட்டுமே வழக்குகள் விசாரணை.. பார் கவுன்சில் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா தொற்று பரவல் முடிந்து இயல்பு நிலை திரும்பும் வரை தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் காணொளி காட்சி மூலமாக மட்டுமே வழக்குகளை விசாரிக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நீதிமன்றங்களுக்கு மே மாதம் அறிவிக்கப்பட்டிருந்த கோடை விடுமுறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது பல நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

 all court cases Investigation only by video conference: Bar Council request

குறிப்பாக, பாதுகாப்பான முறையில் நீதிமன்றத்தை நடத்த போதிய வசதிகள் இல்லாத கீழமை நீதிமன்றங்களில் காணொளி காட்சி மூலமாக மட்டுமே வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தமிழக மற்றும் புதுவை அரசுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வழக்கமாக ஆண்டு தோறும் மே 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை விடப்படும் கோடை விடுமுறை ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் குமரப்பன் அண்மையில் அறிவித்தார்

அவர் தனது அறிவிப்பில் "மே 2 முதல் 31 ம் தேதி வரை வழக்கம் போல் நீதிமன்றம் செயல்படும். "தமிழகம், புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களின் கோடை விடுமுறையும் ரத்து செய்யப்படுவதாக கூறியிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+