திடீர் ரெய்டு! முன்கூட்டியே கசிந்தது எப்படி? ஒரே நேரத்தில் பார்களை மூடிய மர்மம், யாரந்த கருப்புஆடு?
சென்னை: தஞ்சாவூரில் சட்டவிரோத பாரில் விஷம் கலந்த மது அருந்திய இரண்டு பேர் உயிரிழந்த காரணத்தால், சட்டவிரோத பார்கள் மீது ரெய்டு நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ரெய்டு குறித்த தகவல் முன்கூட்டியே கசிந்த காரணத்தால், சட்டவிரோத பார்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
சென்னையில் சட்ட விரோத பார்களில் இரவு நேரங்களில் பிளாக்கில் சரக்கு வாங்க செல்லும் குடிமகன்கள் சரக்கு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.இந்த தகவலை குடிமகன்கள் தெரிவித்தனர். இதுபற்றி குடிமகன்கள் சிலர் கூறுகையில், சென்னையில் பல பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகயை ஒட்டிய பகுதியில் கடை திறக்கும் முன்பும் சட்ட விரோத பார்கள் இயங்கி வந்தன. இரவு 10 மணிக்கு மேல் காலை 12 மணி வரை பிளாக்சில் சரக்குக்கள் சட்டவிரோதமாக விற்பனையும் செய்யப்படும். 70 ரூபாய் அதிகமாக கொடுத்தால் எந்த சரக்கும் இரவு நேரத்தில் கிடைக்கும். ஆனால் கடந்த சில நாட்களாக இரவில் சட்ட விரோதமாக இயங்கும் பார்களில் சரக்குகள் விற்பனை செய்யப்படுவது இல்லை. சட்டவிரோத பார்கள் அனைத்தும் மூடிய கிடக்கின்றன என்று கூறினார்கள்.

சென்னையில் மட்டுமின்றி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விருதுநகர், தேனி, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம் என தமிழகத்தின் பல பகுதிகளிலும் சட்டவிரோதமாக இயங்கிவந்த பார்கள் மூடிக்கிடப்பதாக குடிமகன்கள் தெரிவிக்கிறார்கள்.
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து பெண்கள் உள்பட 22 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவத்தின் சுவடுகள் மறைவதற்குள் தஞ்சாவூர் அருகே மதுகுடித்த 2 பேர் பலியானார்கள். அவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்து இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனால் சட்டவிரோத பார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும் சட்டவிரோத பார்கள் மீது நடவடிக்கை பாயத்தொடங்கியது. திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதியின்றி டாஸ்மாக் அருகே செயல்படும் பார்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்குமாறு எஸ்பி சீபாஸ் கல்யாண் உத்தரவிட்டார்.
திருத்தணி கோட்டத்திற்கு உட்பட்ட பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருத்தணி, கே.ஜி. கண்டிகை, அத்திமாஞ்சேரிபேட்டை, திருவாலங்காடு, கனகம்மாசத்திரம் பகுதிகளில் உள்ள சட்டவிரோத பார்களும் கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 5 பார்களும், சிப்காட் பகுதியில் 6 பார்களும், ஆரம்பாக்கத்தில் 3 பார்களும், கவரைப்பேட்டையில் 4 பார்களும், பாதிரிவேட்டில் ஒரு பார் என கும்மிடிப்பூண்டி தாலுகாவில் அனுமதியின்றி இயங்கி வந்த மொத்தம் 19 பார்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காவல் உட்கோட்டங்களில் சிவகாசி 25, ராஜபாளையம் 25, ஸ்ரீவில்லிபுத்தூர் 20, விருதுநகர் 18, அருப்புக்கோட்டையில் 11, சாத்தூர் 8, திருச்சுழி 14 என மொத்தம் 121 இடங்களில் அனுமதி இன்றி செயல்படும் பார்களில் ஆய்வு செய்து 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட டி.எஸ்.பிக்களுக்கு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் உத்தவிட்டார்.
இதையடுத்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆயத்தமாகி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் தற்போது சட்டவிரோத பார்கள் மூடப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு பிறகு இயங்கிய உரிமம் பெற்ற பார்களும் இப்போது இரவு 10மணிக்கு மேல்சரக்குகள் விற்பது இல்லை என்று குடிமகன்கள் கூறுகிறார்கள். முன்கூட்டியே எப்படி ரெய்டு குறித்து தகவல் கசிந்தது என்று தெரியவில்லை. இந்நிலையில் யாரந்த கருப்பு ஆடு என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!












Click it and Unblock the Notifications