Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணாமலையை காலி செய்ய வேலை செய்கிறேனா.. கொதித்த கரு நாகராஜன்.. என்ன சொன்னார் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீண்டும் மோடி ஆட்சி அமைய போகிறது. தமிழ்நாட்டிலும் இரட்டை இலக்கத்தில் பாஜக வெற்றி பெறும் என்று கூறிய கரு நாகராஜன், அண்ணாமலையை காலி நான் வேலை செய்கிறேனா என்ற கேள்விக்கும் பதில் அளித்துள்ளார்.

ஒன்இந்தியா தமிழுக்கு கரு நாகராஜன் இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் பாஜகவுக்கு இரட்டை இலக்கத்தில் வெற்றி கிடைக்கும். இதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. பாஜகவுக்குள் ஒற்றுமை நிலவுகிறது. ஒருசிலர் வதந்தி பரப்புகிறார்கள். தென் சென்னை தொகுதியில் நான் தேர்தல் பொறுப்பாளர். தேர்தலுக்கு முன்னாடியே நான் வேலை பார்க்கிறேன். யார் வேட்பாளராக வருவார்கள் என்றே தெரியாமல் தான் இருந்தது.

Am I working against Annamalai BJP Karu Nagarajan says this

தமிழிசை சவுந்தரராஜன் வேட்பாளராக வருவார் என்று நினைக்கவில்லை. அவர் கவர்னர் பதவியை ராஜினாமா செய்வார் என்றும் நான் நினைக்கவில்லை. வேளச்சேரி சென்னை சில்கஸ் எதிரில் உள்ள ஆபிசில் தான் 2 மாதமாக வேலை பார்த்தோம். வேட்பாளர்கள் அறிவிப்பு பிற்கு தேர்தல் பணிக்கான குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் முதல் கூட்டத்தில், நான் பேசும்போது எல்லா வேலையையும் நான் பார்த்துக்கிறேன்..

ஆனால் காசு கொடுக்கல் வாங்கல்.. பூத் கமிட்டிக்கு கொடுங்க.. இவங்களுக்கு கொடுங்க.. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு கொடுங்க.. வேட்பாளர் செலவு என்று இருக்கிறதுல்லா.. 95 லட்சம் ரூபாய் செலவழிக்கலாம். ஆனா இந்த வேலையை மட்டும் எனக்கு கொடுக்காதீங்க.. நான் பிரசாரம் செய்கிறேன். மற்ற வேலைகளை எல்லாம் நான் செய்றேன்.இந்த காசு கொடுக்கல் வாங்கல் மட்டும் வேண்டாம் என்று முதல் கண்டிஷன் போட்டேன்.

ஆனால் ஒரு பத்திரிகையில் எனக்கு 2 கோடி தந்ததாக கூறுகின்றனர். சுத்த அப்பட்டாமான பொய்.. அது எப்படி எழுத முடியும். தனிப்பட்ட முறையில் எனக்கு கொடுத்தால் தானே எழுத முடியும். இந்த குற்றச்சாட்டு என் மரியாதையை கெடுக்க நினைக்கும் செயல். என் மரியாதை என்னவென்றால், பணக்காரன், அந்தஸ்தில் உள்ளவன் என்றில்லை. எல்லாரிடமும் பழகுவான், 24/7 எல்லாரிடமும் தொடர்புகொள்ளக் கூடிய பழக்கம் இருக்கு.

இதனை கெடுப்பதற்கு சிலர் இப்படி செய்கிறார்கள். இப்படிப்பட்ட பிழைப்பு அவர்களுக்கு எதற்கு?.. இந்த மாதிரியான பொய்யான பிரசாரங்களை எல்லாம் கண்டு எங்க தலைவர்கள் அஞ்சுவதில்லை. அவர்களுக்கு எல்லாமே தெரியும். தலைவருக்கும் தெரியும், தமிழிசைக்கும் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, அண்ணாமலையை காலி செய்வதற்கு கரு நாகராஜன் உழைப்பதாக பரவும் செய்திக்கு, கரு நாகராஜன் பதில் கூறியதாவது:- இதைவிட காமெடி என்னங்க வேணும். 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய காமெடி இது தான். அண்ணாமலையை காலி செய்வதற்கு கரு நாகராஜன், அடுத்து நாராயண் திருப்பதி, அடுத்து அமர்பிரசாத் ரெட்டி இவங்க எல்லாரும் வேலை செய்கிறார்கள் என்று ஒரு வார இதழில் செய்தி போடுகிறார்கள்.

ஒரு முட்டாள் வந்து பத்திரிகையில் பேட்டி கொடுக்கிறார்கள். அதை ஒருவர் செய்தியாகவும் போடுகிறார்கள். மீண்டும் மோடி ஆட்சி அமைய போகிறது. பாஜக நன்றாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் இரட்டை இலக்கத்தில் பாஜக வெற்றி பெறும். இவ்வாறு கரு நாகராஜன் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+