வலுக்கட்டாயமாக கூட்டம் கூட்டும் முதல்வர்... கிராம சபை கூட்டம் ரத்து செய்தது ஏன்... டிடிவி தினகரன்!
சென்னை: ஊருக்கு ஊர் வலுக்கட்டாயமாக கூட்டம் திரட்டி, எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் முதல்வர் பங்கேற்கும் அரசு விழாக்களை நடத்தும் போது கிராம சபை கூட்டங்களை ரத்து செய்து இருப்பது மிகவும் கண்டனத்துகுரியது என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், "இந்தியாவின் இதயம் கிராமங்களில்தான் வாழ்கிறது" என்று சொன்ன மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி மாநிலம் முழுவதும் நடைபெறவிருந்த கிராமசபை கூட்டங்களை தமிழக அரசு திடீரென ரத்து செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
கிராமப்புற மக்களின் பிரச்னைகள், தேவைகளைப் பற்றி விவாதிப்பதற்கான வாய்ப்பாக உள்ள கிராமசபை கூட்டங்கள் கொரோனாவை காரணம் காட்டி ரத்து செய்யப்பட்டிருப்பது முற்றிலும் ஜனநாயக விரோதமான செயலாகும்
ஊருக்கு ஊர் வலுக்கட்டாயமாக கூட்டம் திரட்டி, எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் முதல்வர் பங்கேற்கும் அரசு விழாக்களை நடத்தும் போது, கிராமசபை கூட்டம் நடத்தினால் மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று சொல்வது ஏற்கக்கூடியதாகவா இருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.
அக்.7-ல் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு உறுதி? சென்னைக்கு வர அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு திடீர் உத்தரவு