இன்று மகா சிவராத்திரி! இரவெல்லாம் கண் விழித்திருக்க முடியாதா? அப்ப இந்த 1 மணிநேரமாவது தூங்காதீர்கள்!
சென்னை: மகா சிவராத்திரியான இன்று இரவு முழுவதும் கண் விழித்திருக்க முடியாதவர்கள் இந்த ஒரு மணி நேரமாவது விழித்திருங்கள். இந்த ஒரு மணி நேரத்தை தவறவிடாதீர்கள்.
இதுகுறித்து பிரியா லட்சுமணன் என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சிவபெருமானுக்கு கொண்டாடப்படக் கூடிய முக்கியமான விழாக்கள் என்றால் அது கார்த்திகை மகா தீபம், ஆருத்ரா தரிசனத்தை எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் இந்த ஒரு விழாவுக்கு மட்டும்தான் ஈசனுடைய பெயராலேயே மகா சிவராத்திரி என அழைக்கப்படுகிறது. இந்த பிரபஞ்சத்தோட சக்தி ஆற்றல் முழுவதும் உங்களை நோக்கி வரும் ஒரு இரவு என்றால் அது மகா சிவராத்திரி. ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமான்தான் பிரபஞ்சமாக இருக்கிறார்.
இந்த சிவத்தை உணரும் ராத்திரிதான் சிவராத்திரி. மகா சிவராத்திரியான இன்று சிவன் கோயில்களில் 4 கால பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஒரு சிலர் இரவு நேரம் முழுவதும் கண் விழித்திருப்பார்கள். ஆனால் சிலரால் இரவு முழுவதும் கண் விழித்திருக்க முடியாத சூழல் இருக்கும்.
இப்படி இரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள் இன்று நள்ளிரவு 12.15 மணி முதல் 12.45 மணி வரை, அதாவது இரவு 12 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையாவது விழித்திருங்கள். இது மிகவும் முக்கியமான நேரம் ஆகும்.
இந்த நேரத்திற்கு லிங்கோத்பவ நேரம் என பெயராகும். சிவபெருமான் தன்னை லிங்கோத்பவராக வெளிக்காட்டிய நேரமும் இதுதான். பார்வதி தேவி சிவபெருமானை நோக்கி பூஜித்த நேரமும் இதுதான். அது மட்டுமில்லாமல் இந்த பிரபஞ்சத்தோட மொத்த சக்தி ஆற்றலும் இந்த பூமியை நோக்கி வரும் நேரமும் இதுதான்.
இந்த நேரம் ரொம்ப முக்கியமானது, நமது முதுகுத்தண்டை நேராக வைத்து நிமிர்ந்து உட்கார்ந்து தியானம் செய்வதுதான். இந்த ஒரு மணி நேரத்தை தவறவிடாமல் மகாசிவராத்திரியில் சிவனை நினைத்து தியானம் செய்யுங்கள். இந்த ஒரு மணி நேரமும் உங்கள் முதுகுத்தண்டை நேராக வைத்து தியானம் செய்து சிவத்தை உணருங்கள். மகா சிவராத்திரியை கொண்டாடுங்கள். இவ்வாறு அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
மகா சிவராத்திரி இன்று கொண்டாடப்படுகிறது. இன்று காலை முதலே பலர் உபவாசத்தை எடுத்துக் கொண்டு விட்டனர். இன்ற இரவு 7.30 மணி முதல் முதல் கால பூஜை தொடங்குகிறது. இந்த நேரமானது கோவிலுக்கு கோவில் மாறுபடும். அடுத்தது இரவு 10.30 மணிக்கு, நள்ளிரவு 12 மணிக்கு, அடுத்த நாள் அதிகாலை 4.30 மணிக்கு என 4 கால பூஜைகள் நடைபெறும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications