Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று மகா சிவராத்திரி! இரவெல்லாம் கண் விழித்திருக்க முடியாதா? அப்ப இந்த 1 மணிநேரமாவது தூங்காதீர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகா சிவராத்திரியான இன்று இரவு முழுவதும் கண் விழித்திருக்க முடியாதவர்கள் இந்த ஒரு மணி நேரமாவது விழித்திருங்கள். இந்த ஒரு மணி நேரத்தை தவறவிடாதீர்கள்.

இதுகுறித்து பிரியா லட்சுமணன் என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சிவபெருமானுக்கு கொண்டாடப்படக் கூடிய முக்கியமான விழாக்கள் என்றால் அது கார்த்திகை மகா தீபம், ஆருத்ரா தரிசனத்தை எடுத்துக் கொள்ளலாம்.

maha shivratri 2025 2025

ஆனால் இந்த ஒரு விழாவுக்கு மட்டும்தான் ஈசனுடைய பெயராலேயே மகா சிவராத்திரி என அழைக்கப்படுகிறது. இந்த பிரபஞ்சத்தோட சக்தி ஆற்றல் முழுவதும் உங்களை நோக்கி வரும் ஒரு இரவு என்றால் அது மகா சிவராத்திரி. ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமான்தான் பிரபஞ்சமாக இருக்கிறார்.

இந்த சிவத்தை உணரும் ராத்திரிதான் சிவராத்திரி. மகா சிவராத்திரியான இன்று சிவன் கோயில்களில் 4 கால பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஒரு சிலர் இரவு நேரம் முழுவதும் கண் விழித்திருப்பார்கள். ஆனால் சிலரால் இரவு முழுவதும் கண் விழித்திருக்க முடியாத சூழல் இருக்கும்.

இப்படி இரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள் இன்று நள்ளிரவு 12.15 மணி முதல் 12.45 மணி வரை, அதாவது இரவு 12 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையாவது விழித்திருங்கள். இது மிகவும் முக்கியமான நேரம் ஆகும்.

இந்த நேரத்திற்கு லிங்கோத்பவ நேரம் என பெயராகும். சிவபெருமான் தன்னை லிங்கோத்பவராக வெளிக்காட்டிய நேரமும் இதுதான். பார்வதி தேவி சிவபெருமானை நோக்கி பூஜித்த நேரமும் இதுதான். அது மட்டுமில்லாமல் இந்த பிரபஞ்சத்தோட மொத்த சக்தி ஆற்றலும் இந்த பூமியை நோக்கி வரும் நேரமும் இதுதான்.

இந்த நேரம் ரொம்ப முக்கியமானது, நமது முதுகுத்தண்டை நேராக வைத்து நிமிர்ந்து உட்கார்ந்து தியானம் செய்வதுதான். இந்த ஒரு மணி நேரத்தை தவறவிடாமல் மகாசிவராத்திரியில் சிவனை நினைத்து தியானம் செய்யுங்கள். இந்த ஒரு மணி நேரமும் உங்கள் முதுகுத்தண்டை நேராக வைத்து தியானம் செய்து சிவத்தை உணருங்கள். மகா சிவராத்திரியை கொண்டாடுங்கள். இவ்வாறு அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

மகா சிவராத்திரி இன்று கொண்டாடப்படுகிறது. இன்று காலை முதலே பலர் உபவாசத்தை எடுத்துக் கொண்டு விட்டனர். இன்ற இரவு 7.30 மணி முதல் முதல் கால பூஜை தொடங்குகிறது. இந்த நேரமானது கோவிலுக்கு கோவில் மாறுபடும். அடுத்தது இரவு 10.30 மணிக்கு, நள்ளிரவு 12 மணிக்கு, அடுத்த நாள் அதிகாலை 4.30 மணிக்கு என 4 கால பூஜைகள் நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+