கலைஞர் மறைவுக்கு தேம்பி தேம்பி அழுத கேப்டன் விஜயகாந்த்.. இது வெள்ளை மனசு.. நெகிழும் ரசிகர்கள்
சென்னை: முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மரணம் அடைந்த போது, தேம்பி தேம்பி அழுது அஞ்சலி செலுத்தினார் விஜயகாந்த். அவர் அன்று அஞ்சலி செலுத்திய வீடியோவை இன்று பகிர்ந்துள்ள பலர், இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகிறார்கள்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று காலாமனார். அவரது உடலுக்கு தமிழகம் முழுவதிலிருந்தும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்த சென்னை வந்துள்ளனர். சென்னையில் உள்ள பலர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நிலையில், அவரை பற்றிய நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள்.

விஜயகாந்த் சினிமா வாழ்க்கையில் எத்தனை பேருக்கு உதவினார் என்பது அவரது மரணத்திற்கு பின்னர் தான் தெரியவந்துள்ளது. சினிமாவில் சான்ஸ் தேடிஅலைந்த பலருக்கு பசி ஆற்றினார். தன்னிடம் உதவி என்று கேட்டுவந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உதவிகளை வாரி வழங்கி இருக்கிறார். இதெல்லாம் அவர் சினிமாவில் நடித்த காலம்முழுவதும் செய்தார். அரசியலுக்கு வந்த பின்னரும் செய்தார்.
விஜயகாந்த் அரசியல் ரீதியாக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்தார். திருமண மண்டபம் இடிக்கப்பட்ட போதும் சரி, அதன்பிறகு ஜெயலலிதா உடன் கூட்டணி வைத்தது போதும் சரி கடுமையாக விமர்சித்தார். எந்த இடத்திலும் கலைஞரை தனிப்பட்ட முறையில் விமர்சித்தது இல்லை. ஆட்சி மற்றும் அதிகாரம் குறித்தே விமர்சித்தார். கலைஞர் கருணாநிதி மீது அளவற்ற பாசம் கொண்டவர் கேப்டன் விஜயகாந்த். விஜயகாந்தின் திருமணத்தை நடத்தி வைத்ததே கலைஞர் கருணாநிதி தான். 1990 இல் திருமணம் நடந்தது.
2016ம் ஆண்டு விஜயகாந்த்தை கூட்டணியில் இழுக்க கருணாநிதி எவ்வளவோ முயற்சித்தார். ஆனால் என்ன காரணத்தினாலோ அது கடைசி நேரத்தில் கைகூடாமல் போனது. இதனிடையே கலைஞர் கருணாநிதி 2018ம் ஆண்டு மரணம் அடைந்த போது, மெரினாவில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், மருத்துவமனையில் இருந்து திரும்பிய பின்னர் கலைஞர் நினைவிடம் சென்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்.
அவரது கண்ணீரை பார்த்த பலர், இவரையா நாம் கடுமையாக விமர்சித்தோம் என்று அரசியல் கடந்து வருந்தினார்கள். அதேபோல் கலைஞர் மரணம் அடைந்த செய்த கேட்டு அவர் வெளியிட்ட வீடியோவிலும், உடைந்து தேம்பி தேம்பி அழுதார். அது கல் நெஞ்சையும் கரையை வைத்தது. இந்த இரண்டு வீடியோக்களையும் இப்போது மீண்டும் வெளியிட்டுள்ள ரசிகர்கள், அவர் மரணம் அடைந்ததை நினைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்று நெகிழ்ச்சியுடன் ஒருவர் கூறியுள்ளார். கேப்டனின் உண்மையான பாசம் என்று வீடியோ குறித்து கூறிய ஒருவர், அவருக்கு பொது இடத்தில் சமாதி அமைக்க வேண்டும். மணிமண்டபம் கட்ட வேண்டும் என்றார். இன்னொருவர் வெளியிட்ட பதிவில், அழுவுற ஆம்பிளைய நம்ப கூடாதுன்னு நினைச்சேன். ஆனா கேப்டன் அழுகுறத பார்க்கும் போது என்னுடைய எண்ணம் தவறோன்னு தோணுது. ஒரு நல்ல ஆத்மாவை தமிழ்நாடு இழந்து விட்டது. உங்களுக்கு பல நன்றிகள் அய்யா என்று கூறியுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications