இரண்டு ரிஷப்சன்கள்.. ஒன்று வி.ஐ.பி.க்களுக்கு.. மற்றொன்று கட்சிக்காரர்களுக்கு.. அன்புமணி இல்ல விழா..!
சென்னை: பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது மகள் திருமண வரவேற்பு விழாவையொட்டி கட்சியினருக்கு ஸ்பெஷல் விருந்து அளிக்க உள்ளார்.
சுமார் இரண்டாயிரம் பேருக்கு மேல் அழைப்பிதழ் அனுப்பியுள்ள அன்புமணி ராமதாஸ், இந்த விருந்தை மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் கொடுக்கிறார்.
கடந்த வாரம் மிக நெருங்கிய உறவுகள் முன்னிலையில் அன்புமணி ராமதாஸ் மகள் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

அன்புமணி மகள்
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா-ஷங்கர்பாலா இணையரின் திருமணம் கடந்த வாரம் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மிக எளிய முறையில் நடைபெற்றது. மிக நெருங்கிய குடும்ப உறவுகளுக்கு மட்டுமே திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த திருமணத்தையொட்டி சென்னை ஐ.டி.சி.நட்சத்திர விடுதியில் மகள் திருமண வரவேற்பு விழாவை நடத்தினார் அன்புமணி ராமதாஸ்.

முதலமைச்சர்
அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய தொழிலதிபர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் மட்டும் கலந்துகொண்டனர். அவர்களுக்கு மட்டும் தான் அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது. பேத்தியின் திருமண வரவேற்பு விழாவுக்கு வருகை புரிந்து மணமக்களை வாழ்த்திய அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ராமதாஸ் இருகரம் கூப்பி நன்றி தெரிவித்து வழியனுப்பி வைத்தார்.

வரவேற்பு விழா
இந்நிலையில், கட்சிக்காரர்களுக்கும், வன்னியர் சங்கப் பிரமுகர்களுக்கும் ஸ்பெஷல் விருந்தளிக்க விரும்பிய ராமதாஸ் இதற்காக மற்றொரு ரிஷப்ஷன் நிகழ்ச்சியை நடத்த ஆலோசனைக் கூறியிருக்கிறார். அதன்படி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில், இரண்டாவது ரிஷப்ஷன் விழா நாளை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

சைவம்- அசைவம்
இவர்களுக்காக அசைவம், சைவம் என இரண்டு மெனுக்களை தயார் செய்துள்ள அன்புமணி, வந்தவர்கள் மனதார மணமக்களை வாழ்த்தி வயிராற சாப்பிட்டு செல்ல வேண்டும் என்பதற்காக அசைவ உணவுகளில் உள்ள அனைத்து வகைகளையும் ஏற்பாடு செய்திருக்கிறார். நேற்று முன் தினம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், பாமக தலைவர் கோ.க.மணி திருமண வரவேற்பு விழாவுக்காக ஏற்பாடுகளை மகாபலிபுரத்தில் முகாமிட்டு கவனித்து வருகிறார். சமூக இடைவெளியுடன் உணவு சாப்பிடும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
63000 தொழில் நிறுவனங்கள் மூடியாச்சு! மின் கட்டணத்தை யாருக்கும் உயர்த்தவே கூடாது! அன்புமணி வலியுறுத்தல் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications