நீர் நிலைகளில் வீடு கட்ட அனுமதி! அதிகாரிகளை ஜெயிலில் போடணும்! சஸ்பெண்ட் செய்வது வேஸ்ட்! -அன்புமணி
சென்னை: நீர் நிலைகளில் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அனுமதி கொடுத்த அரசு அதிகாரிகளை முதலில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை வெள்ளத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை இழந்து நிற்கதியாக நிற்கும் சூழலில் அன்புமணி இத்தகைய கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே சென்னை மற்றும் அதன் புற நகர் பகுதிகளில் இருந்த 250 ஏரி, குளங்களை காணவில்லை என அன்புமணி கூறியிருந்தார்.

சி.எம்.டி.ஏ. வில் சதுர அடிக்கு இவ்வளவு என லஞ்சம் நிர்ணயித்து நீர் நிலைகளில் கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அனுமதி கொடுக்கிறார்கள் என்றும் சதுர அடிக்கு 10 ரூபாய் என ஆரம்பித்து 150 ரூபாய் வரை சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். இது போன்ற அதிகாரிகளை கண் துடைப்புக்காக சஸ்பெண்ட் செய்தால் மட்டும் போதாது, நீர் நிலைகளை அழித்த குற்றத்திற்காக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என அன்புமணி ஆவேசமாக வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல் சி.எம்.டி.ஏ. வில் அடிக்கடி கள ஆய்வு நடத்தவும், கண்காணிக்கவும் போதிய ஆட்கள் இல்லை என்றும் பெயருக்கு இருப்பவர்களை வைத்துக்கொண்டு ஆய்வுக்கு செல்லாமலேயே அலுவலகத்தில் அமர்ந்துகொண்டு அனுமதி கொடுத்ததன் விளைவே இந்த வெள்ளப் பாதிப்பு என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இப்போது 2 பேரையாவது கைது செய்து சிறையில் அடைத்தால் தான் இனி வரும் நாட்களில் நீர் நிலைகளில் கட்டிடங்கள் கட்ட எந்த அரசு அதிகாரியும் அனுமதி கொடுக்கமாட்டார்கள் என்றும் இனி வரும் காலங்களில் இந்தாண்டை போலவே இயற்கை சீற்றங்கள் வரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார். அன்புமணி ராமதாஸ் கூறிய இந்த விவகாரம் சற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications