மன்னிப்பு கேட்டாரா அண்ணா? அண்ணாமலைக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த சுளீர் பதிலடி! பரபர எக்ஸ் ஸ்பேஸ்
சென்னை: முத்துராமலிங்க தேவரிடம், அறிஞர் அண்ணா மன்னிப்பு கேட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதால் அதிமுக-பாஜக கூட்டணி முறிந்துள்ளது. இந்த விஷயத்தில் தொடர்ந்து ஆர்எஸ் பாரதி தவிர்த்து, திமுக பெரிய தலைவர்கள் அமைதி காத்து வந்த நிலையில் முதல் முதலாக முதல்வர் ஸ்டாலின் அண்ணாமலைக்கு எக்ஸ் ஸ்பேஸ் (ட்விட்டர் ஸ்பேஸ்) உரையாடலில் பதிலடி கொடுத்துள்ளார்.
திமுக சார்பில் திராவிட மாதம் என்பது செப்டம்பரில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஒரு மாதமாக திமுக திராவிட மாத கொண்டாட்டத்தை கொண்டாடி வந்தது.

திமுக ஐடி விங்க் சார்பில் ஏற்படுத்தப்பட்ட எக்ஸ் ஸ்பேஸ் (முன்பு ட்விட்டர் ஸ்பேஸ்) கலந்துரையாடலில் திமுக தலைவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தி வந்தனர்.
இந்நிலையில் தான் திராவிட மாத கொண்டாட்டத்தின் இறுதி நாளான இன்று முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் ஸ்பேஸில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: ட்விட்டர் உள்பட அனைத்து சமூக வலைதளங்களையும் கொள்கையை பரப்பும் கருவியாக பயன்படுத்த வேண்டும். மக்களை திசைதிருப்பும் கூட்டத்தை அம்பலப்படுத்த வேண்டும்.
நான் கூட ‛ஸ்பிக்கிங் பார் இந்தியா' என ‛ப்ரோட்காஸ்ட்' தொடங்கி உள்ளேன். இதில் 2 நிகழ்ச்சி முடிந்துள்ளது. தெலுங்கு, மலையாளம், இந்தி என மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. வலைதள பேச்சு என்பது 10 முதல் 14 பொதுக்கூட்டங்களுக்கு சமமானதாக உள்ளது. வலைதளங்களில் அதிமுக பாஜக பொய் செய்திகளை பரப்புவதற்காகவே வேலைக்கும், கூலிக்கும் ஆட்களை வைத்துள்ளனர். அதிமுகவுக்கு கொள்கை இல்லை. கொள்கை சார்ந்த விஷயம் இல்லை.
பாஜகவை பொறுத்தளவில் பிரித்தாளும் அரசியல் செய்கிறது. அவர்களிடம் சாதனை என சொல்ல எதுவும் இல்லை. முக்கிய பிரச்சினைகளை தவிர்த்துவிட்டு பிற விஷயங்களை பேசி அதையே பிரச்சினையாக்குவார்கள். வதந்தி பரப்புவார்கள். இதுதான் அவர்கள் அரசியல். அறிஞர் அண்ணா, முத்துராமலிங்க தேவரிடம் மன்னிப்பு கேட்டதாக சொன்னார்கள். ஆனால் இந்து நாளிதழ் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக தாங்கள் செய்தி வெளியிடவில்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டது. மருதமலை கோவிலுக்கு திமுக அரசு மின் இணைப்பு தரவில்லை என கூறினார்கள். ஆனால் திமுக ஆட்சிக்கு வரும் 5 ஆண்டுகளுக்கு முன்பே மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜகவை பொறுத்தமட்டில் அனைவரும் பொய் சொல்கின்றனர். பிரதமர், மத்திய அமைச்சர்கள் உள்பட பலரும் நாடாளுமன்றத்தில் பொய்களை பேசி வருகின்றனர்.
நாம் அனைத்துக்கும் பதில் சொல்லி கொள்ள வேண்டி இருக்க முடியுமா. கள்ள கூட்டணியில் உள்ள கூட்டணியில் உள்ள பரப்பும் பொய்களுக்கு ஆயுள் குறைவு. நமது கொள்கைக்கு ஆயுள் அதிகம். இதனால் 6வது முறையாக ஆளும் வாய்ப்பு வந்துள்ளது. இதனை தொடர்ந்து செய்தால் 40ம் நமதே நாடு நமதே என்றாகி விடும்'' என்றார்.
-
பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
கோடை மழைக்கு எண்ட் கார்டு.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்! இனிதான் சம்பவம் இருக்கு -
புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய் -
வரிசையாக காலை வாரும் தலைவர்கள்.. காங்கிரஸுக்கு விழுந்த மரண அடி.. இப்படியே போன தோல்வி உறுதி! -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல் -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்? -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
அடிச்சு பெய்யப்போகும் மழை.. பெரிய சம்பவம் இருக்கு! உஷாரா இருங்க மக்களே!











Click it and Unblock the Notifications