மன்னிப்பு கேட்டாரா அண்ணா? அண்ணாமலைக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த சுளீர் பதிலடி! பரபர எக்ஸ் ஸ்பேஸ்
சென்னை: முத்துராமலிங்க தேவரிடம், அறிஞர் அண்ணா மன்னிப்பு கேட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதால் அதிமுக-பாஜக கூட்டணி முறிந்துள்ளது. இந்த விஷயத்தில் தொடர்ந்து ஆர்எஸ் பாரதி தவிர்த்து, திமுக பெரிய தலைவர்கள் அமைதி காத்து வந்த நிலையில் முதல் முதலாக முதல்வர் ஸ்டாலின் அண்ணாமலைக்கு எக்ஸ் ஸ்பேஸ் (ட்விட்டர் ஸ்பேஸ்) உரையாடலில் பதிலடி கொடுத்துள்ளார்.
திமுக சார்பில் திராவிட மாதம் என்பது செப்டம்பரில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஒரு மாதமாக திமுக திராவிட மாத கொண்டாட்டத்தை கொண்டாடி வந்தது.

திமுக ஐடி விங்க் சார்பில் ஏற்படுத்தப்பட்ட எக்ஸ் ஸ்பேஸ் (முன்பு ட்விட்டர் ஸ்பேஸ்) கலந்துரையாடலில் திமுக தலைவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தி வந்தனர்.
இந்நிலையில் தான் திராவிட மாத கொண்டாட்டத்தின் இறுதி நாளான இன்று முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் ஸ்பேஸில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: ட்விட்டர் உள்பட அனைத்து சமூக வலைதளங்களையும் கொள்கையை பரப்பும் கருவியாக பயன்படுத்த வேண்டும். மக்களை திசைதிருப்பும் கூட்டத்தை அம்பலப்படுத்த வேண்டும்.
நான் கூட ‛ஸ்பிக்கிங் பார் இந்தியா' என ‛ப்ரோட்காஸ்ட்' தொடங்கி உள்ளேன். இதில் 2 நிகழ்ச்சி முடிந்துள்ளது. தெலுங்கு, மலையாளம், இந்தி என மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. வலைதள பேச்சு என்பது 10 முதல் 14 பொதுக்கூட்டங்களுக்கு சமமானதாக உள்ளது. வலைதளங்களில் அதிமுக பாஜக பொய் செய்திகளை பரப்புவதற்காகவே வேலைக்கும், கூலிக்கும் ஆட்களை வைத்துள்ளனர். அதிமுகவுக்கு கொள்கை இல்லை. கொள்கை சார்ந்த விஷயம் இல்லை.
பாஜகவை பொறுத்தளவில் பிரித்தாளும் அரசியல் செய்கிறது. அவர்களிடம் சாதனை என சொல்ல எதுவும் இல்லை. முக்கிய பிரச்சினைகளை தவிர்த்துவிட்டு பிற விஷயங்களை பேசி அதையே பிரச்சினையாக்குவார்கள். வதந்தி பரப்புவார்கள். இதுதான் அவர்கள் அரசியல். அறிஞர் அண்ணா, முத்துராமலிங்க தேவரிடம் மன்னிப்பு கேட்டதாக சொன்னார்கள். ஆனால் இந்து நாளிதழ் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக தாங்கள் செய்தி வெளியிடவில்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டது. மருதமலை கோவிலுக்கு திமுக அரசு மின் இணைப்பு தரவில்லை என கூறினார்கள். ஆனால் திமுக ஆட்சிக்கு வரும் 5 ஆண்டுகளுக்கு முன்பே மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜகவை பொறுத்தமட்டில் அனைவரும் பொய் சொல்கின்றனர். பிரதமர், மத்திய அமைச்சர்கள் உள்பட பலரும் நாடாளுமன்றத்தில் பொய்களை பேசி வருகின்றனர்.
நாம் அனைத்துக்கும் பதில் சொல்லி கொள்ள வேண்டி இருக்க முடியுமா. கள்ள கூட்டணியில் உள்ள கூட்டணியில் உள்ள பரப்பும் பொய்களுக்கு ஆயுள் குறைவு. நமது கொள்கைக்கு ஆயுள் அதிகம். இதனால் 6வது முறையாக ஆளும் வாய்ப்பு வந்துள்ளது. இதனை தொடர்ந்து செய்தால் 40ம் நமதே நாடு நமதே என்றாகி விடும்'' என்றார்.
-
ஒரு பக்கம் Delimitation.. இன்னொருபுறம் அண்ணா சிலைக்கு மாலை! நாகர்கோவில் மோடி சம்பவம் -
பெரும் தலைகளையே ‘போட்டுப் பார்த்த’ வாக்காளர்கள்.. காமராஜர், அண்ணாவை தோற்கடித்த தேர்தல் வரலாறு! -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
உத்தரப் பிரதேசம் vs தமிழ்நாடு! லோக்சபா தொகுதி மறுவரையறையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? ஷாக் தகவல்! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
வங்கிகளில் தங்க நகையை அடகு வைத்தவர் தவிர வேறு நபர் மீட்க முடியுமா? விதிமுறைகள் சொல்வது இதுதான்! -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின்












Click it and Unblock the Notifications