மீண்டும் மீண்டும் அதையே சொல்லும் அண்ணாமலை... பாஜக 3-வது பெரிய கட்சியாக உருவெடுத்துவிட்டதாம்!
சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக 3-வது பெரிய கட்சியாக உருவெடுத்துவிட்டதாக மீண்டும் கூறி இருக்கிறார் அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் அண்மையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி வார்டுகளில் பாஜக 22, நகராட்சி வார்டுகளில் 56, பேரூராட்சி வார்டுகளில் 230 இடங்களில் பாஜக வென்றுள்ளது.

குமரி மாவட்டத்தில் பாஜக
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக பெரும்பான்மை இடங்களைப் பெற்றுள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் பாஜக டெபாசிட்டை கூட பறிகொடுத்துள்ளது. ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் 3-வது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துவிட்டது என கூறி வருகிறார்.

3-வது பெரிய கட்சி காங்.
தேர்தல் ஆணைய புள்ளி விவரங்களின்படியே காங்கிரஸ் கட்சி மாநகராட்சி வார்டுகளில் 73, நகராட்சி வார்டுகளில் 151, பேரூராட்சி வார்டுகளில் 368 இடங்களைக் கைப்பற்றி 3-வது கட்சியாக உள்ளது. இதனால் அண்ணாமலையின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி மறுப்பு தெரிவித்து வருகிறார்.

சென்னையில் ராகுல்
இந்நிலையில் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் எனும் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். இக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி பாஜகவை கடுமையாக விமர்சித்தார். மேலும் பாஜக தொடர்ந்து கனவு காணலாம்.. ஆனால் பாஜகவை எப்படி களத்தில் எதிர்கொள்வது என்பது எங்களுக்கு தெரியும் எனவும் கூறியிருந்தார் ராகுல் காந்தி.

அண்ணாமலை விளக்கம்
இதற்கு உடனே பதிலளித்து அறிக்கை வெளியிட்ட அண்ணாமலை, கச்சத்தீவு விவகாரம், 2009-ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தம் உள்ளிட்டவற்றில் காங்கிரஸில் நிலைப்பாடுகளை விமர்சித்துள்ளார். அதேபோல் சத்தியமூர்த்தி பவனில் நாற்காலிக்காக நடந்த சண்டையையும் குறிப்பிட்டு அதனை முதலில் சரிசெய்யுங்கள் எனவும் கிண்டலடித்துள்ளார். அத்துடன் நாடாளுமன்றத்தில் தமிழகத்தை ஒருபோதும் பாஜகவால் ஆளவே முடியாது என்கிற ராகுல் காந்தியின் பேச்சை குறிப்பிட்டு, உங்களுக்கு மிக்க நன்றி.. இப்போது தமிழகத்தில் 3-வது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துவிட்டது என கூறியிருக்கிறார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 3%-க்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ள நிலையிலும் கன்னியாகுமரி மாவட்ட கட்சியாக பாஜக சுருங்கியுள்ள நிலையிலும் மீண்டும் மீண்டும் 3-வது பெரிய கட்சி பாஜக என அண்ணாமலை கூறியிருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
-
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
பாஜகவின் "பெரிய அசைன்மெண்ட்".. தடையாய் நிற்கும் சைலண்ட் கில்லாடி? விஜய்யின் இமேஜ் மேக்ஓவர் சிதையுமா? -
புதுச்சேரியில் 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டி.. பாஜக + அதிமுக + லஜகவுக்கு 14 சீட்! -
ஆமா.. அதிமுக எதற்காக பாஜகவுக்கு இன்னும் சீட் ஒதுக்கவில்லை.. பின்னணியில் நடப்பது இதுதான்! -
பாஜக விஜய்க்கு விரித்த சிவப்பு கம்பளம்.. YES சொல்வாரா? ஷேர் ஆட்டோ பாலிட்டிக்ஸ் தமிழகத்தில் எடுபடுமா? -
பாஜக கூட்டணிக்கு விஜய் வருவாரா? டெல்லி தலைமை முடிவு செய்யும்.. நயினார் நாகேந்திரன் சூசக பதில்! -
விஜய் ஆசைக்கு ‘வேட்டு’ வைத்த ரங்கசாமி.. புதுச்சேரியில் தவெக உடன் கூட்டணி கிடையாது.. அதிரடி முடிவு! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு!












Click it and Unblock the Notifications