Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவில் இருந்து விலகிய பிறகு அரசியல் அரங்கில் அடுத்த கட்ட நகர்வுகளை தீவிரப்படுத்தியுள்ள அண்ணாமலை, வரும் செப்டம்பர் 14-ஆம் தேதி தனது புதிய கட்சியின் பெயர், கொள்கைகள் மற்றும் நிர்வாக அமைப்பை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக அரசியலில் கடந்த சில மாதங்களாக அதிகம் பேசப்படும் பெயர்களில் ஒன்றாக அண்ணாமலை இருந்து வருகிறார். பாஜக மாநிலத் தலைவராக இருந்த காலத்தில் தனது தீவிர அரசியல் செயல்பாடுகள், நேரடி விமர்சனங்கள் மற்றும் இளைஞர்களிடையே உருவாக்கிய ஆதரவால் கவனம் பெற்றார்.

Annamalai bjp Politics

பாஜகவில் இருந்து விலகிய பிறகும் அரசியல் விவாதங்களின் மையமாகவே இருந்து வருகிறார். பாஜகவில் இருந்து விலகிய உடனேயே அண்ணாமலை இமயமலைக்கு சென்றது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

வீ தி லீடர்ஸ்

அரசியலில் இருந்து தற்காலிக ஓய்வா? அல்லது புதிய அரசியல் பாதைக்கு தயாராகிறாரா? என்ற கேள்விகள் அப்போது எழுந்தன. ஆனால் தற்போது வெளியாகும் தகவல்கள், அவர் புதிய அரசியல் இயக்கத்தை உருவாக்கும் பணிகளில் முழுமையாக ஈடுபட்டிருப்பதை காட்டுகின்றன. அண்ணாமலை தொடங்கியுள்ள "வீ தி லீடர்" இயக்கத்தில் தினமும் ஏராளமான இளைஞர்கள் இணைந்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக பாரம்பரிய அரசியல் கட்சிகளால் விரக்தியடைந்த இளைஞர்களை ஒன்றிணைப்பதே அவரது முதல் கட்ட இலக்காக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்ணாமலை

இதற்காக அரசியல் விழிப்புணர்வு மற்றும் தலைமைத்துவ பயிற்சிகளை வழங்கும் வகையில் பல்வேறு திட்டங்களும் தயாராகி வருகின்றன. ஜூன் மாதத்தில் அரவக்குறிச்சியில் நடைபெற்ற பயிற்சி முகாம் அதற்கான தொடக்க முயற்சியாக பார்க்கப்படுகிறது. அரசியல் என்பது தேர்தலில் போட்டியிடுவது மட்டுமல்ல; சமூகப் பிரச்சினைகளை புரிந்து கொண்டு தீர்வு காணும் திறன் வேண்டும் என்ற அடிப்படையில் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

புதிய கட்சி

புதிய கட்சியின் அறிவிப்புக்கு முன்பாகவே மாவட்ட வாரியாக அமைப்புகளை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பாளர்களை தேர்வு செய்வது, உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை விரிவுபடுத்துவது மற்றும் சமூக வலைதள அணிகளை வலுப்படுத்துவது போன்ற பணிகள் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக 50 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

செப்டம்பர் 14

இதன் மூலம் பழைய தலைமுறை அரசியலுக்கு மாற்றாக புதிய தலைமுறை அரசியலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அண்ணாமலை இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அண்ணாமலையின் அரசியல் பயணத்தில் அடுத்த முக்கிய நாளாக செப்டம்பர் 14 பார்க்கப்படுகிறது. அந்த நாளில் புதிய கட்சியின் பெயர், கொள்கைகள், அமைப்பு கட்டமைப்பு மற்றும் முக்கிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

சுற்றுப்பயணம்

அதேநேரத்தில், கட்சியின் அரசியல் நிலைப்பாடு என்ன? தேசிய அரசியலுடன் எந்த வகையான உறவை பேணும்? தமிழகத்தில் எந்த பிரச்சினைகளை முன்னிறுத்தும்? போன்ற கேள்விகளுக்கும் அந்த அறிவிப்பின் மூலம் பதில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கட்சி வெறும் தேர்தல் அரசியலை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்காது. சமூக மாற்றம், நல்லாட்சிக்கான மாற்று அரசியல் மற்றும் இளைஞர் தலைமையை உருவாக்கும் முயற்சியாக இருக்கும் என அண்ணாமலைக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

இளைஞர் அரசியல்

புதிய கட்சி அறிவிப்புக்குப் பிறகு அண்ணாமலை மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற உள்ள இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை நேரடியாக மக்களை சந்திக்க அவர் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த பயணத்தின் போது உறுப்பினர் சேர்க்கை முகாம்கள், இளைஞர் சந்திப்புகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடல்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+