பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்!
சென்னை: பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தற்போது பாஜகவிலிருந்து விலகியிருக்கிறார். இதனையடுத்து புதிய கட்சியை தொடங்க இருக்கிறார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாக இருக்கிறது. ஆனால், இது பாஜகவின் திட்டம் என்றும், அதன் பின்னால் ஆர்எஸ்எஸ் இருக்கிறது எனவும் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் எச்சரித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர், மாநில அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக, கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு திமுக மற்றும் அதிமுக எனும் இரண்டு பெரிய திராவிட கட்சிகளை விஜய் ஓரம் கட்டியிருக்கிறார். அதிமுக எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்தை இழந்திருக்கிறது.

இப்படி இருக்கையில், இளைஞர்கள் புதிய கட்சி மீது ஆர்வமாக இருக்கின்றனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழகத்தில் பாஜகவை வளர்க்க அண்ணாமலை திட்டமிட்டு வருகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதி செய்யும் விதமாக அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகியிருக்கிறார். பொதுவாக ஒருவர் கட்சியிலிருந்து விலகுகிறார் என்றால், அக்கட்சியின் தலைவரை தேடிச் சென்று ராஜினாமா கொடுக்க மாட்டார். பொதுவெளியில் ராஜினாமாவை அறிவிப்பார்.
ஆனால் அண்ணாமலை விஷயத்தை பாருங்கள்.. அவர் அமித்ஷாவின் வீட்டிற்கு தேடி சென்று பேசியிருக்கிறார். இதெல்லாம் சந்தேகத்தை கிளப்புகிற என்று காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கூறி வருகின்றனர்.
இப்படி இருக்கையில், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூரின் ட்வீட் கவனம் பெற்றிருக்கிறது. "2002 முதல் 2026 வரை அனைத்து கூட்டணிகளையும், அரசியல் பரிசோதனைகளையும் செய்து பார்த்தும் தமிழ்நாட்டில் வேரூன்ற முடியாத RSS-BJP அமைப்பின் புதிய திட்டம் தயாராகிவிட்டதா?
அமித் ஷாவின் அனுமதியுடன்,
மோடியின் ஆசீர்வாதத்துடன்,
BJP மற்றும் RSS பெயர்கள் இல்லாத ஒரு புதிய அரசியல் முகமூடி.
பெயர் மட்டும் புதிதாக இருக்கலாம்.
கொள்கை, கட்டுப்பாடு, நோக்கம் அதே பழையதா?
தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கான "Plan B" ஆக இது உருவாக்கப்படுகிறதா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது
தமிழ்நாடு கடந்த காலத்திலும் அரசியல் வேடமாற்றங்களை அடையாளம் கண்டுள்ளது.
இனியும் பெயர் மாற்றத்தை அல்ல, உண்மையான மாற்றத்தையே மக்கள் மதிப்பிடுவார்கள்.
முகமூடி மாறலாம்.
ஆனால் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதுதான் முக்கியம்.
Plan B is ready for Tamilnadu
RSS behind it
Beware of them"
என்று மாணிக்கம் தாகூர் ட்வீட் செய்திருக்கிறார். இந்த ட்வீட் அண்ணாமலை குறித்த பல்வெறு தரப்பினரின் சந்தேகத்தை பிரதிபலிக்கும் வகையில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications