Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அல்டிமேட்.. ரூ.50000 கடன் வேணுமா? அன்னபூர்ணா யோஜனா திட்டம் போதுமே? மத்திய அரசு சூப்பர்: பெண்கள் குஷி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் வேணுமா? மத்திய அரசு அறிவித்திருக்கும் இந்த சூப்பர் திட்டத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா?

இந்தியாவின் மகளிரின் நலனுக்காகவும், மகளிரின் வளமான வாழ்வுக்காகவும், மத்திய அரசு எத்தனையோ விதமான அறிவிப்புகளையும் திட்டங்களையும் கொண்டுவந்துள்ளது. இப்படி திட்டங்களை அறிவிப்பதுடன் மட்டுமல்லாமல், அந்த திட்டங்களில் சலுகைகளையும் வழங்கி வருகிறது. அதில் ஒன்றுதான் அன்னபூர்ணா யோஜனா திட்டம்.

Annapurna scheme ₹50,000 and rs50000 debt for women to start Catering Business by Central Government

ஆண்களுக்கு நிகராக பெண்களும், அனைத்து துறைகளிலும் முன்னேற வேண்டும் என்பதற்காகவும், சுயதொழில் செய்து பெண்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவும் மத்திய அரசு இதனை செயல்படுத்தி வருகிறது.

சுயதொழில்:
அதற்கேற்றபடி, சுயதொழில் செய்து சம்பாதிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் இப்போது அதிகரித்தபடியே வருகிறது.. இந்த பெண்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதாலும், சுயதொழில் தொடங்குவதற்கு, மூலதனம் என்பது பெரிய பிரச்சனையாக இருப்பாலும், பல பெண்கள் சுயமாக தொழில் தொடங்க வழியில்லாமல் உள்ளனர். இவர்களுக்காகவே கொண்டுவரப்பட்டதுதான் அன்னபூர்ணா யோஜனா.

மத்திய அரசின் உணவு தன்னிறைவு திட்டமான அன்னப்பூர்ணா திட்டத்தின் கீழ், உணவு கே பிசினஸில் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்க ரூ. 50,000 வரை வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. பாத்திரங்கள், சமையல் கருவிகள், உணவுப் பொருட்கள், உணவு மேஜை உள்ளிட்டவை வாங்க இந்த தொகையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

அப்ரூவல்: இந்த கடனுக்கு அப்ரூவல் வந்தபிறகு முதல் தவணையை செலுத்த தேவையில்லை. கடனை எளிய தவணை முறையில் 36 மாதங்கள் அதாவது 3 வருடங்களுக்குள் திருப்பி செலுத்தலாம். சந்தை நிலவரம், வங்கி ஆகியவற்றைப் பொறுத்து வட்டி விகிதம் மாறக்கூடும்.

அந்தவகையில், கேட்டரிங் ஆரம்பிக்க விரும்பும் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக ரூ.50,000/- கடனாக வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இந்த கடன்தொகையில், சமையல் உபகரணங்கள், குளிர்சாதனப்பெட்டி, எரிவாயு இணைப்பு, சாப்பாட்டு மேஜைகள் வாங்கிக்கொள்ளலாம்..

கடன்தொகை: இந்த கடன் தொகையை திரும்ப செலுத்தவும், தொழில் முனைவோருக்கு அதே 3 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படுகிறது.. இந்த கடன் தொகையை பெண்கள் தங்களது தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்தி தானும் முன்னேற வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும்.

இதனை பெற விரும்பும் நபர்கள் கூடுதல் தகவலுக்கு எஸ்பிஐ வங்கியின் கிளைகளை தொடர்பு கொள்ளலாம். என்றும், SBI வங்கியின் மூலமாகவே தங்களது கடன் தொகையையும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சபாஷ் திட்டம்: சுயதொழில் தொடங்க வழியில்லாத பெண்களுக்கு மட்டுமல்ல, சுயமாக தொழில் தொடங்க ஆர்வம் இல்லாத பெண்களுக்கும் உத்வேகத்தை தந்து கொண்டிருக்கிறது மத்திய அரசின் அன்னபூர்ணா திட்டம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+