அல்டிமேட்.. ரூ.50000 கடன் வேணுமா? அன்னபூர்ணா யோஜனா திட்டம் போதுமே? மத்திய அரசு சூப்பர்: பெண்கள் குஷி
சென்னை: பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் வேணுமா? மத்திய அரசு அறிவித்திருக்கும் இந்த சூப்பர் திட்டத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா?
இந்தியாவின் மகளிரின் நலனுக்காகவும், மகளிரின் வளமான வாழ்வுக்காகவும், மத்திய அரசு எத்தனையோ விதமான அறிவிப்புகளையும் திட்டங்களையும் கொண்டுவந்துள்ளது. இப்படி திட்டங்களை அறிவிப்பதுடன் மட்டுமல்லாமல், அந்த திட்டங்களில் சலுகைகளையும் வழங்கி வருகிறது. அதில் ஒன்றுதான் அன்னபூர்ணா யோஜனா திட்டம்.

ஆண்களுக்கு நிகராக பெண்களும், அனைத்து துறைகளிலும் முன்னேற வேண்டும் என்பதற்காகவும், சுயதொழில் செய்து பெண்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவும் மத்திய அரசு இதனை செயல்படுத்தி வருகிறது.
சுயதொழில்: அதற்கேற்றபடி, சுயதொழில் செய்து சம்பாதிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் இப்போது அதிகரித்தபடியே வருகிறது.. இந்த பெண்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதாலும், சுயதொழில் தொடங்குவதற்கு, மூலதனம் என்பது பெரிய பிரச்சனையாக இருப்பாலும், பல பெண்கள் சுயமாக தொழில் தொடங்க வழியில்லாமல் உள்ளனர். இவர்களுக்காகவே கொண்டுவரப்பட்டதுதான் அன்னபூர்ணா யோஜனா.
மத்திய அரசின் உணவு தன்னிறைவு திட்டமான அன்னப்பூர்ணா திட்டத்தின் கீழ், உணவு கே பிசினஸில் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்க ரூ. 50,000 வரை வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. பாத்திரங்கள், சமையல் கருவிகள், உணவுப் பொருட்கள், உணவு மேஜை உள்ளிட்டவை வாங்க இந்த தொகையை பயன்படுத்திக்கொள்ளலாம்.
அப்ரூவல்: இந்த கடனுக்கு அப்ரூவல் வந்தபிறகு முதல் தவணையை செலுத்த தேவையில்லை. கடனை எளிய தவணை முறையில் 36 மாதங்கள் அதாவது 3 வருடங்களுக்குள் திருப்பி செலுத்தலாம். சந்தை நிலவரம், வங்கி ஆகியவற்றைப் பொறுத்து வட்டி விகிதம் மாறக்கூடும்.
அந்தவகையில், கேட்டரிங் ஆரம்பிக்க விரும்பும் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக ரூ.50,000/- கடனாக வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இந்த கடன்தொகையில், சமையல் உபகரணங்கள், குளிர்சாதனப்பெட்டி, எரிவாயு இணைப்பு, சாப்பாட்டு மேஜைகள் வாங்கிக்கொள்ளலாம்..
கடன்தொகை: இந்த கடன் தொகையை திரும்ப செலுத்தவும், தொழில் முனைவோருக்கு அதே 3 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படுகிறது.. இந்த கடன் தொகையை பெண்கள் தங்களது தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்தி தானும் முன்னேற வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும்.
இதனை பெற விரும்பும் நபர்கள் கூடுதல் தகவலுக்கு எஸ்பிஐ வங்கியின் கிளைகளை தொடர்பு கொள்ளலாம். என்றும், SBI வங்கியின் மூலமாகவே தங்களது கடன் தொகையையும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சபாஷ் திட்டம்: சுயதொழில் தொடங்க வழியில்லாத பெண்களுக்கு மட்டுமல்ல, சுயமாக தொழில் தொடங்க ஆர்வம் இல்லாத பெண்களுக்கும் உத்வேகத்தை தந்து கொண்டிருக்கிறது மத்திய அரசின் அன்னபூர்ணா திட்டம்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications