வருமானத்திற்கு அதிகமாக சொத்து.. ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு
சென்னை: பள்ளிக்கல்வித்துறை முன்னாள் இயக்குநரும், ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளருமான ராமேஸ்வரம் முருகன் அவரது மனைவி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் ராமேஸ்வரம் முருகனுக்கு சொந்தமான இடங்களில் நேற்று ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
தமிழக பள்ளி கல்வித்துறை முன்னாள் இயக்குநரும், தற்போதைய ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளருமான ராமேஸ்வரம் முருகன், குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அரசு பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக பதவி வகித்தவர். இவர் கடந்த ஆட்சியின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.ஏ. செங்கோட்டையனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

தற்போது தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரிய செயலராக உள்ளார். இந்த நிலையில் கடந்த 2012 முதல் 2016 ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக நேற்றைய தினம் ஈரோடு, அக்ரஹார வீதியில் உள்ள ராமேஸ்வரன் முருகனின் மாமனார் அறிவுடை நம்பி வீட்டிலும், கோபிசெட்டிபாளையம் வெள்ளாங்கோயில் பகுதியில் உள்ள அவரது தந்தையார் வீட்டிலும் நேற்று காலை 8 மணி முதல் ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி ராஜேஷ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.
அறிவுடைநம்பிக்கு, ஈரோடு அக்ரஹார வீதியில் நகைக்கடை உள்ள நிலையில் அங்கும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் ரேகா உள்ளிட்ட 8 க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
கோபிச்செட்டிப்பாளையம், வெள்ளாங்கோயிலில் உள்ள ராமேஸ்வர முருகனின் வீட்டில் அவரது தந்தை சின்ன பழனிசாமி இருந்தார். அப்போது அங்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீஸார், வீட்டின் கதவுகளை பூட்டிக்கொண்டு சோதனையில் ஈடுபட்டனர். நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய சோதனையானது தொடர்ந்து மாலை வரை நீடித்தது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அரசு பள்ளி கல்வித்துறை இயக்குனராக இருந்தபோது இவர் மீது எழுந்த பல்வேறு முறைகேடு புகார்களின் அடிப்படையிலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பெயரிலும் இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சோதனையில் ராமேஸ்வரம் முருகன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தற்காக ஆவணங்கள் சிக்கின. வருமானத்திற்கு அதிகமாக ராமேஸ்வரம் முருகன் 3.45 கோடி சொத்து சேர்த்ததாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து ராமேஸ்வரம் முருகன், அவர மனைவி அகிலாண்டேஸ்வரி, தாய், தந்தை, மாமனார் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications