சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி, மேகாலயா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். ஆனால் இந்த இடமாற்றத்தை தஹில் ரமானி ஏற்க மறுத்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

மேகாலயா தலைமை நீதிபதி ஏ.கே. மிட்டல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உச்சநீதிமன்ற கொலிஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டார். இதன் பின்னர் இடமாற்றத்தை ஏற்க மறுத்த நீதிபதி தகில் ரமானி தமது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஏ.கே. மிட்டலை மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்துக்கு இன்று கொலீஜியம் மாற்றியுள்ளது. மேலும் பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏபி ஷாஹியை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கொலிஜியம் நியமித்துள்ளது.
திரிபுரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications