அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சிக்கல்?.. கட்டிட பணி நிறைவு சான்றிதழ்.. டைம் வேஸ்ட்.. பறந்த கோரிக்கை
சென்னை: பணி நிறைவு சான்றிதழ்களை பயன்படுத்தி, மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு பெறுவதில் புதிய சிக்கல் ஒன்று கிளம்பி உள்ளதாம். இதுகுறித்து முக்கிய கோரிக்கை ஒன்றும் வலுத்து வருகிறது.
தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில், நிலத்தின் பிரிக்கப்படாத பங்கான யுடிஎஸ் பத்திரம் தனியாகவும், கட்டுமான ஒப்பந்தம் தனியாகவும், இதுநாள்வரையிலும் பதிவு செய்யப்பட்டு வந்தது.

பணி நிறைவு சான்றிதழ்: ஆனால், பணி நிறைவு சான்றிதழ் பெறப்பட்ட நிலையில், யுடிஎஸ் பத்திரம், கட்டுமான ஒப்பந்தம் தனித்தனியாக பதிவு செய்யப்படுவதால், பதிவுத்துறைக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டது. அதனால்தான், பணி நிறைவு சான்றிதழ் பெற்ற திட்டங்களில், யுடிஎஸ் பத்திரத்திலேயே கட்டிட மதிப்பையும் குறிப்பிட்டு, இரண்டுக்கும் சேர்த்து முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் வசூலிக்க, பதிவுத்துறை முடிவு செய்தது..
அதுமட்டுமல்ல, அடுக்குமாடி திட்டங்களில் பணி நிறைவு சான்றிதழ் பெற்ற வீடுகளுக்கு மட்டுமே, இந்த புதிய நடைமுறை பொருந்தும் என்றும், பணிகள் நடந்து வரும் திட்டங்களில், யுடிஎஸ் பத்திரம் தனியாகவும், கட்டுமான ஒப்பந்தம் தனியாகவும் பதிவு செய்வதில், எந்தவிதமான தடையும் இல்லை" என்றும் பதிவுத்துறை தரப்பில் விளக்கம் ஒன்று தரப்பட்டிருந்தது.
அந்தவகையில், நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் பணி நிறைவு சான்றிதழ் வழங்குவதற்கான நடைமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன.. எனினும், இந்த பணி நிறைவு சான்றுகளை பயன்படுத்தி, மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு பெறுவதில் காலதாமதமாவதாக கூறப்படுகிறது.
புதிய கோரிக்கை: இதுகுறித்து தமிழக வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி. மணிசங்கர் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் சொன்னதாவது:
"நகராட்சி, மாநகராட்சிகள் வழங்கும் பணி நிறைவு சான்றிதழின் அசல் பிரதி அல்லது சான்றிடப்பட்ட பிரதியை, மின்சார, குடிநீர் இணைப்புகள் பெறுவதற்காக தாக்கல் செய்கிறோம்.. இந்த சான்றிதழ் வழங்கப்பட்டது உண்மையா என்பதை உறுதி செய்ய, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும், நகராட்சி, மாநகராட்சிகளுக்கு கடிதம் எழுதுகிறார்கள்..
ஆன்லைன் வசதி: ஆனால், இந்த கடிதம், நகராட்சி, மாநகராட்சிக்கு வந்து, அவர்கள் அதை உறுதிப்படுத்தி பதில் கடிதம் எழுதுவதற்கே 10 நாட்களுக்கு மேல் ஆகிவிடுகிறது. இது வீடு கட்டும் மக்களையும் அலைக்கழிக்க வைக்கிறது.. கடிதம் எழுதி பதில் பெற்று சரிபார்ப்போம் என்பதால் கூடுதல் தாமதத்தை ஏற்படுத்துகிறது... நகராட்சி, மாநகராட்சிகள் வழங்கும் சான்றிதழ், கம்ப்யூட்டர்களில் தயாராவதால், இவற்றை ஆன்லைன் முறையிலேயே சரி பார்க்க வசதி ஏற்படுத்த வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications