ரூ.7500 கோடி.. சென்னைதான் வேண்டும்.. குறி வைத்த ஆப்பிள் நிறுவனம்.. முதலீடு செய்யும் ஃபாக்சான்.. செம!
சென்னை: சென்னையில் ஆப்பிள் நிறுவனம் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது, தனது தொழிற்சாலையை தொடங்க வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வருகிறது. அதேபோல் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை அனுப்பும் ஃபாக்சான் நிறுவனம் சென்னையில் முதலீட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
சென்னையின் மீது முதலீடு செய்ய கொஞ்சம் கொஞ்சமாக உலக நிறுவனங்கள் திட்டமிட்டு வருகிறது. அதிலும் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் சென்னையில் முதலீடு செய்ய அதிக விருப்பம் தெரிவித்து வருகிறது.
சீனாவில் இருந்து உலக நிறுவனங்கள் வெளியேற தொடங்கி உள்ளது.வர்த்தக போர் காரணமாக சீனாவில் இருந்து இந்த நிறுவனங்கள் வெளியேறி வருகிறது. முக்கியமாக அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேறி வருகிறது.

சென்னை நிலைமை
இந்த நிலையில்தான் சீனாவில் இருந்து வெளியேறும் இந்த நிறுவனங்கள் சென்னையில் முதலீடு செய்ய முடிவு எடுத்து இருக்கிறது. அதன்படி சீனாவில் இருந்து ஆப்பிள் நிறுவனம் வெளியேற முடிவு செய்துள்ளது. இது சென்னை வர வாய்ப்புள்ளது. சென்னையில் தைவானை சேர்ந்த ஃபாக்சான் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. சென்னையில் ஏற்கனவே ஃபாக்சான் நிறுவனம் உள்ளது. தற்போது சென்னையில் ஃபாக்சான் நிறுவனம் கூடுதலாக 7500 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு எடுத்துள்ளது.

என்ன முடிவு
சீனாவில் மொத்தமாக முதலீட்டை நிறுத்திவிட்டு மொத்தமாக அதை அப்படியே சென்னை நோக்கி திருப்ப இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்னையில் ஸ்ரீபெரும்புதூரில் இந்த தொழிற்சாலை உள்ளது. ஃபாக்சான் என்பது ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை அனுப்பும் நிறுவனம் ஆகும். ஆப்பிள் நிறுவனம் கொடுத்த அழுத்தத்தால் தற்போது இவர்கள் சீனாவில் இருந்து வெளியேறுகிறார்கள்.

வேலை வாய்ப்பு
ஃபாக்சான் நிறுவனத்திற்கு ஆந்திராவிலும் ஒரு கிளை உள்ளது. இருந்தாலும் அவர்கள் சென்னையில் முதலீடு செய்ய இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் சென்னையில் அடுத்தடுத்து 6000+ வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். 3 வருடங்களில் இந்த முதலீடு முழுமையாக செய்யப்படும் என்று கூறுகிறார்கள். சென்னையில் இவர்கள் ஐபோன் எக்ஸ்ஆர் வகையை உருவாக்க உள்ளனர்.

ஐபோன் வகை
இதற்கு முன் சென்னையில் ஐபோன் எஸ்இ வகை உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் சென்னையில் மொத்தமாக ஆப்பிள் போன் தயாரிப்பு மாற்றப்படலாம் என்கிறார்கள். அதாவது சீனாவில் இருக்கும் கிளை நிறுவனத்தை ஆப்பிள் சென்னைக்கு மாற்றலாம். ஃபாக்சான் நிறுவனத்தை சென்னை அனுப்ப ஆப்பிள்தான் என்பதால் அதே ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் சென்னையை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications