அரசு திட்டங்களை செயல்படுத்தவும் கண்காணிக்கவும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்.. தமிழக அரசு உத்தரவு
சென்னை: தமிழக அரசின் திட்டங்களை செயல்படுத்தவும் கண்காணிக்கவும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசின் நலத்திட்டங்கள் வேகமாக நடைபெறவும் அவ்வப்போது ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவது வழக்கம். சாலை, வசதி, கழிப்பிட வசதி, தெரு விளக்குகள், குடிநீர் பிரச்சினை உள்ளிட்டவற்றை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஏற்கனவே அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தான் ராமநாத புரத்திற்கு ஏற்கனவே இருந்த அதிகாரி விலக்கப்பட்டு புதிய அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், திருப்பத்தூருக்கு நந்த கோபால் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். திருப்பூர் மாவட்டத்திற்கு ரீட்டா ஹரிஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 38 மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்கள் ஏற்கனவே பொறுப்பாளர்களாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில அதிகாரிகள் மற்றும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications