திருமண பிரிவு குறித்து கற்பனை கட்டு கதைகள்..வீடியோக்களை நீக்காவிட்டால் வழக்கு! ஏஆர் ரஹ்மான் நோட்டீஸ்
சென்னை: ஏ.ஆர் ரஹ்மான் திருமண பிரிவு குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களுடன் கட்டுரைகள், வீடியோக்களை சில ஊடகங்கள் வெளியிடப்பட்டுள்ளது, இதனால் ஏ.ஆர் ரஹ்மான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்பும் வகையில் வெளியிட்ட பதிவுகளை நீக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் ஊடகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தமிழ் துறையுலகின் பிரபல இசை அமைப்பாளராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோட்சி வருபவர் ஏ.ஆர்.ரகுமான். கடந்த 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானுவை திருமணம் செய்து கொண்டார் ராகுமார்.

இந்த தம்பதியினருக்கு இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் திருமண பந்தத்தில் 30 ஆண்டுகளை நெருங்கி வரும் வேளையில் ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு தாங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்தார்.
இருவருக்கும் இடையே தீர்க்க முடியாத இடைவெளி உருவானதாக அவர் தெரிவித்திருந்தது திரையுலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பதிவிட்டிருந்த ஏ.ஆர்.ரகுமான் தங்களது திருமண பந்தம் 30 ஆண்டுகளை எட்டும் என நம்பி இருந்தோம். ஆனால் எல்லாமே கண்ணுக்கு தெரியாத முடிவாக சென்று விட்டது என எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக கூறியிருந்தார்.

ஏ.ஆர் ரகுமானின் அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்தில் அவரது இசைக் குழுவில் பேஸ் கிட்டாரிக்காக பணிபுரியும் மோஹினி டே என்பவரும் தனது கணவரை பிரிவதாக அறிவித்திருந்தார். இதை அடுத்து சமூக வலைதளங்களில் ஏராளமான கட்டுக்கதைகளும் கருத்துக்களும் உலாவியது.
இந்த நிலையில் அந்த விவகாரங்களுக்கும் தங்களது பிரிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என சாய்ரா பானு தரப்பு கூறி இருந்தது. மேலும் தனது தந்தை குறித்து அவதூறான கருத்துக்கள் ஆதரமற்ற வதந்திகள் பரப்பப்படுவதாக ஏ.ஆர்.ரகுமான் மகன் அமீனும் கூறி இருந்தார். இந்த நிலையில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு கருத்துக்கள் பரப்பப்படுவதாகவும், இதுபோன்ற கருத்துகளால் ஏ.ஆர் ரஹ்மான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்பும் வகையில் வெளியிட்ட பதிவுகளை நீக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் ஊடகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அந்த நோட்டீஸில்," ஏ.ஆர் ரஹ்மான் திருமண பிரிவு குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களுடன் கட்டுரைகள், வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஏ.ஆர் ரஹ்மான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். அதனால் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்பும் வகையில் வெளியிட்ட பதிவுகளையும் சில கற்பனையில் அளித்த பேட்டிகளையும் நீக்க வேண்டும். இந்த அவதூறு வீடியோக்கள், கட்டுரைகளை உடனடியாக நீக்காவிட்டால், இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டப்பிரிவுகளின் கீழ் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்படும்" என கூறப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications