கலெக்டர் வீட்டில் அத்துமீறி நுழைந்த வழக்கு.. செந்தில் பாலாஜிக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன்.. ஹைகோர்ட்
சென்னை: கரூர் மக்களவை தொகுதி தேர்தல் அதிகாரி வீட்டில் அத்துமீறி நுழைந்த வழக்கில் அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கரூர் மக்களவை தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஜோதிமணி போட்டியிட்டுள்ளார். இவரை ஆதரித்து இறுதிகட்ட பிரச்சாரம் மேற்கொள்ள செந்தில்பாலாஜி திட்டமிட்டு இருந்தார்.

இதற்கான அனுமதியை அளிக்க மாவட்ட தேர்தல் அலுவலரும், கரூர் மாவட்ட ஆட்சியருமான அன்பழகன் மறுத்துவிட்டார். இந்த விவகாரத்தில் அவரது இல்லத்துக்கு நள்ளிரவில் திமுகவினர் புகுந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஆட்சியர் அன்பழகன் புகாரின் பேரில் தாந்தோணிமலை போலீசார் செந்தில் பாலாஜி உள்ளிட்ட சிலர் மீது தேர்தல் அதிகாரி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் கைது ஆவதில் இருந்து தவிர்க்கும் வகையில் அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், செந்தில் பாலாஜி உள்பட 3 பேருக்கு நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. வாரத்தில் 3 நாட்கள் தாந்தோணிமலை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என நிபந்தனையுடன் உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications