Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சின்ன வெங்காயம் சர்னு போயிருச்சு.. கோயம்பேட்டை மலைத்து பார்த்த விவசாயிகள்.. உடனே கோட்டைக்கு கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளுக்கு நாள் பூண்டு விலை உயர்ந்து வரும்நிலையில், சின்ன வெங்காயம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதுகுறித்த முக்கிய கோரிக்கை ஒன்றை விவசாயிகள் தமிழக அரசுக்கு எழுப்பி வருகிறார்கள்.

சமீபநாட்களாகவே, நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்து வந்தது.. தமிழகத்திலும் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 150 ரூபாய் வரையிலும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 80 ரூபாய் வரையிலும் விற்பனையானது.

Are these the reasons for the small onion Low Price and what are the Major requests to Tamil Nadu Government

வெங்காய விலை: எனவேதான், மத்திய அரசு தரப்பில் திடீரென ஒரு உத்தரவு வெளியானது.. அந்தவகையில், விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், மக்களுக்கு வெங்காயம் கிடைப்பதை அதிகரிக்கவும், சாமானிய மக்கள் வெங்காய விலை உயர்வால் பாதிக்கப்படாமல் தடுக்கும் நடவடிக்கையாக 2024 மார்ச் மாதம் வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்து உத்தரவிட்டது.

வெங்காயத்தின் விலை கணிசமாக அதிகரித்ததன் காரணமாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்து இருப்பதாக விளக்கமும் தரப்பட்டிருந்தது.. அதுமட்டுமல்ல, மேலும் பிற நாடுகளிடமிருந்து வரும் கோரிக்கையின் அடிப்படையில் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என்றும் மத்திய அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

புதிய கோரிக்கை: இந்நிலையில், சின்ன வெங்காயம் விலை சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.. இப்படிப்பட்ட சூழலில், ஏற்றுமதியை மீண்டும் துவங்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அரியலுார், பெரம்பலுார், திருச்சி, ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், சிறிய வெங்காயம் சாகுபடி நடந்து வருகிறது. இங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேஷியா, அரபு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.. எனவே, வட மாநிலங்களில் பெரிய வெங்காயம் சாகுபடி, 2023ம் ஆண்டு பாதித்தது.

தடை: இந்த விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக, வெளிநாடுகளுக்கு அதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால், பெரிய வெங்காயம் விலையும் கட்டுக்குள்ளேயே இருக்கிறது..

இன்றைக்கு கிலோ 30 ரூபாய்க்கு கீழ் விற்பனையாகி வருகிறது. ஏற்றுமதியை கட்டுப்படுத்தாவிட்டால், கிலோ 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்திருக்கும்.. பெரிய வெங்காயத்துடன் சிறிய வெங்காயம் ஏற்றுமதிக்கும் தடை நீடிக்கிறது. எனவேதான் விலை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

கோயம்பேடு மார்க்கெட்டில், சின்ன வெங்காயம் 1 கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தடை விதிப்பதற்கு முன், 100 முதல் 150 ரூபாய்க்கு விற்பனையானது. ஏற்றுமதி தடையால், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை.. மேலும், விலை வீழ்ச்சியால், விவசாயிகள் கடுமையான அவதிக்கும், அதிருப்திக்கும் ஆளாகி உள்ளனர்.

பிரதமர மோடி: இதன்காரணமாக, ஏற்றுமதிக்கான அனுமதியை மத்திய அரசு மறுபடியும் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்... இது தொடர்பாக, பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுத வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+