Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சசிகலாவை அடக்க முடியாதா? - தலைமை மீது பாய்ந்த மா.செக்கள்

Subscribe to Oneindia Tamil

நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் செயல்படுவது, நிர்வாகிகள் மீதான வழக்குகள், அவைத்தலைவர் தேர்வு, சசிகலா செயல்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க அதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் இன்று தலைமை அலுவலகத்தில் நடந்து வருகிறது, இதில் சசிகலாவின் செயல்பாடுகள் குறித்தும் பேசப்பட்டதாகவும், அவரை அடக்க முடியாதா? என்றும் வாதம் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரட்டை தலைமை-சசிகலா என்ட்ரி குழப்பத்தில் தொண்டர்கள்

இரட்டை தலைமை-சசிகலா என்ட்ரி குழப்பத்தில் தொண்டர்கள்

அதிமுக ஆட்சியை இழந்ததிலிருந்து இரட்டைத்தலைமை காரணமாக தொடர்ந்து உள்ளூர் கோஷ்டி மோதல் இருந்துக்கொண்டே இருக்கிறது. மேலுக்கு ஓபிஎஸ்-இபிஎஸ் ஒற்றுமை காட்டினாலும் மோதல் நடப்பது வெளிப்படையாக தெரிவதை காண முடிகிறது. அதிமுகவுக்குள் உள்ள பிரச்சினை போதாது என்று சசிகலாவின் என்ட்ரியும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

துரோகத்தை சந்தித்த சசிகலா

துரோகத்தை சந்தித்த சசிகலா

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கி, டிடிவியை துணைப்பொதுச் செயலாளராக்கிவிட்டு சிறைச்சென்ற சசிகலாவுக்கு துரோகம் பரிசாக கிடைத்தது. அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். ஓபிஎஸ் கட்சிக்குள் சேர்த்துக்கொள்ளப்பட்டார். டிடிவி தினகரனும் நீக்கப்பட்டார். சசிகலாவின் கையை விட்டு அதிமுக போன நிலையில் கடந்த பிப்ரவரியில் 4 ஆண்டு சிறைத்தண்டனை முடித்து வெளிவந்தார் சசிகலா.

வரும்போதே பெருத்த எதிர்ப்பார்ப்புடன் வந்தாலும் தேர்தல் களத்திலிருந்து ஒதுங்குவதாக அவர் அறிவித்தார். நிர்பந்தம் காரணமாக அவர் அவ்வாறு அறிவித்தார் என்று கூறப்பட்டது. தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததும் மீண்டும் சசிகலா களத்தில் குதித்தார். ஏற்கெனவே பொதுச் செயலாளர் வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் நான் தான் பொதுச் செயலாளர் என அவர் பேட்டி அளிப்பதும், அறிக்கை அனுப்புவதும், கல்வெட்டு திறப்பதுமாக உள்ளார்.

ஓபிஎஸ் ஆதரவு தோற்றம், விமர்சிக்காத தலைவர்கள்

ஓபிஎஸ் ஆதரவு தோற்றம், விமர்சிக்காத தலைவர்கள்

ஓபிஎஸ் சசிகலாவுக்கு ஆதரவு தருவதுபோன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ் தரப்பும் சசிகலாவை கடுமையாக விமர்சிப்பதில்லை. இந்நிலையில் அதிமுகவில் ஒரு பகுதியினர் இதுகுறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். சசிகலா மீது உறுதியான நடவடிக்கை எதையும் தலைமையும் எடுக்கவில்லை.

Recommended Video

    மழையால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கே சென்று நிவாரண உதவிகளை வழங்கிய சசிகலா
     சசிகலா மீது நடவடிக்கை எடுக்காமல் சாஃப்ட் கார்னர் ஏன்? மா.செக்கள் கூட்டத்தில் கேள்வி

    சசிகலா மீது நடவடிக்கை எடுக்காமல் சாஃப்ட் கார்னர் ஏன்? மா.செக்கள் கூட்டத்தில் கேள்வி

    இந்நிலையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் எதிரில் மாநில நிர்வாகிகள் மோதிக்கொண்டனர். மாவட்டச் செயலாளர்கள் சிலர் பேசும்போது அதிமுகவின் செயல்பாடு குறைந்து போனது, அதிமுக பொதுச் செயலாளர் என சசிகலா அறிவித்து செயல்பட்டு வருகிறார். சி.வி.சண்முகம், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி தவிர வேறு கட்சி நிர்வாகிகள் இதுகுறித்து பேசுவதே இல்லை.

    சசிகலா மீது கட்சி சாஃப்ட் கார்னரில் உள்ளதா? அவர் பொதுச் செயலாளரா? அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில் என்ன தயக்கம் என சிலர் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கட்சிக்குள் ஏற்படும் குழப்பமும், கட்சி அணியினர் சோர்வையும் அடைந்து வருகிறார்கள் அதை தடுக்காமல் தலைமை மவுனமாக இருக்கிறது என குற்றம் சாட்டி பேசியதாக தெரிகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+