"அவருமா?".. முதல்ல எடப்பாடி பழனிசாமியை விடாதீங்க.. பற்ற வைத்த சீனியர்.. திமுக என்ன செய்ய போகிறது?
எடப்பாடி பழனிசாமியையும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க புகழேந்தி வலியுறுத்துகிறார்
சென்னை: சசிகலா ஒருபக்கம் தனிக்கட்சி துவங்க போவதாக செய்திகள் கசிந்து வரும் நிலையில், அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தியின் பேச்சு, எடப்பாடி பழனிசாமிக்கு தலைவலியை உண்டுபண்ணி வருகிறது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை முடங்கியிருந்த நிலையில், திமுக அரியணை ஏறியதையடுத்து, சூடு பிடித்துவிட்டது.
சமீபத்தில் ஆறுமுகசாமி ஆணையம் ஓபிஎஸ்ஸிடம் விசாரணை நடத்தியது.. அந்த விசாரணை நாட்களில் ஓபிஎஸ் சொன்ன பெரும்பாலான வார்த்தை "எனக்கு எதுவும் தெரியாது" என்பதுதான்.

ஆளுநர் - பிரதாப் ரெட்டி
"அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதா நன்றாக இருப்பதாக ஒருசில முறை சசிகலா என்னிடம் சொன்னார்.. அதைத்தாண்டி எனக்கு எதுவும் தெரியாது. அரசாங்க பணிகள் தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக சசிகலா எந்த தகவலையும் என்னிடம் சொல்லவில்லை.. என்னென்ன உணவுகள் வழங்கப்பட்டது என்பது பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது.,. அப்போதைய ஆளுநர் பிரதாப் ரெட்டியை மட்டும் சந்தித்ததும் எனக்கு நினைவில்லை... CPR சிகிச்சை செய்தது எனக்கு தெரியாது" என்றே ஓபிஎஸ் பதில்கள் அமைந்திருந்தன.

எடப்பாடி பழனிசாமி
எனினும் இந்த விஷயத்தில் எடப்பாடி பழனிசாமியை ஏன் விசாரிக்காமல் இருக்கிறார்கள் என்று, மூத்த தலைவர் புகழேந்தி விடாமல் கேள்வி எழுப்பி கொண்டே இருக்கிறார்.. புகழேந்தியின் வாதம் இதுதான்: "இப்படி ஒரு ஆணையத்தை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டதே எடப்பாடி பழனிசாமிதான்.. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, எடப்பாடி பழனிசாமியுடன் நானும்தான் மருத்துவமனையில் இருந்திருக்கிறேன்.. நடந்தவை எல்லாமே எடப்பாடிக்கு நன்றாகவே தெரியும்...

புகழேந்தி கேள்வி
எடப்பாடி பழனிசாமி ஆணையத்தை அமைக்கும்போது, இந்த ஆணையம் அவசியம் என்பதை அரசு ஆணை மூலம் குறிப்பிட்டுள்ளார். அதனால், அவர் விசாரிக்கப்பட்டால் பல உண்மைகள் வெளிவரும் என்று நம்புகிறேன்.. இது தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திலும் மனு அளித்துள்ளேன். என்னை விசாரணைக்கு அழைத்தாலும் வரத் தயார்" என்பதைதான் அப்போதிருந்து புகழேந்தி சொல்லி வருகிறார்.

விசாரணை ஆணையம்
இதே விஷயத்தைதான் நேற்றைய தினமும் புகழேந்தி வலியுறுத்தி உள்ளார்.. சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, "ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஆறுமுகசாமி ஆணையம் தனது விசாரணையை நிறைவு செய்து இருந்தாலும், உரிய முகாந்திரம் இருந்தால் மறுபடியும் ஆணையம் விசாரணை மேற்கொள்ளலாம் என்று சுப்ரீம்கோர்ட் அறிவுறுத்தி இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

பொதுப்பணித்துறை
அதன் அடிப்படையிலேயே எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்... 2016ம் ஆண்டு ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போது நடைபெற்ற காவிரி விவகாரம் தொடர்பான கூட்டத்தில் அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றாரா? அப்போது என்ன நடந்தது? என்பன உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாகவே ஆணையம் அவரிடம் விசாரிக்க வேண்டும்..

விளக்கம்
ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்த ஓபிஎஸ் இதுவரை முழு உண்மையும் தெரிவிக்கவில்லை... வக்கீலுடன் என்னையும் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆணையத்திடம் மனு கொடுத்து உள்ளேன்" என்று புகழேந்தி கூறினார். புகழேந்தியின் இந்த கோரிக்கையையடுத்து, எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது..

திமுக ஸ்டாலின்
"உண்மையை வெளியே கொண்டுவர வேண்டும் என்கிற உண்மையான அக்கறை இருந்திருந்தால், முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்திலேயே மருத்துவ நிபுணர் குழுவையும் போட்டிருப்பார்களே, அப்போதே ஏன் விசாரணை துரிதமாகவில்லை" என்று ஏற்கனவே சிலர் இது தொடர்பாக கேள்வி எழுப்பி வரும் நிலையில், தற்போது எடப்பாடிக்கு மீண்டும் தலைவலி கூடியுள்ளது. "ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருந்தால் அதை வெளிக்கொண்டு வருவோம்" என்று சொல்லி ஆட்சியை பிடித்த திமுக இந்த விஷயத்தில் இனி என்ன செய்ய போகிறது? எத்தகைய முடிவை எடுக்க போகிறது என்பதும் இனிமேல் தெரியவரும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications