சென்னை அசோக் லேலண்ட்- மேலும் 7 நாட்களுக்கு உற்பத்தி நிறுத்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அசோக் லேலண்ட் வாகன உற்பத்தி நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கு மேலும் 7 நாட்கள் கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதார மந்த நிலையிலானது பல்வேறு துறைகளையும் கடுமையாக பாதித்திருக்கிறது. குறிப்பாக ஆட்டோமொபைல் துறை மிகப் பெரும் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது.

Ashok Leylands Chennai plant declares 7 more production holidays

இதனால் ஆட்டோ மொபைல் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் அசோக் லேலண்ட் நிறுவனம் சில நாட்களுக்கு முன்னர் சென்னை எண்ணூர், ஓசூர் உள்ளிட்ட 5 தொழிற்சாலைகளில் மொத்தம் 59 நாட்கள் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று சென்னை எண்ணூர் அசோக் லேலண்ட் நிறுவனத்தில் மேலும் 7 நாட்கள் உற்பத்தி நிறுத்தப்படுவதாகவும் இந்த நாட்களில் தொழிலாளர்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Ashok Leylands Chennai plant declares 7 more production holidays

அத்துடன் கட்டாய விடுப்பு அறிவித்த நாட்களுக்கான ஊதியம் குறித்து தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+