சென்னை அசோக் லேலண்ட்- மேலும் 7 நாட்களுக்கு உற்பத்தி நிறுத்தம்
சென்னை: சென்னை அசோக் லேலண்ட் வாகன உற்பத்தி நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கு மேலும் 7 நாட்கள் கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதார மந்த நிலையிலானது பல்வேறு துறைகளையும் கடுமையாக பாதித்திருக்கிறது. குறிப்பாக ஆட்டோமொபைல் துறை மிகப் பெரும் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது.
இதனால் ஆட்டோ மொபைல் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் அசோக் லேலண்ட் நிறுவனம் சில நாட்களுக்கு முன்னர் சென்னை எண்ணூர், ஓசூர் உள்ளிட்ட 5 தொழிற்சாலைகளில் மொத்தம் 59 நாட்கள் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று சென்னை எண்ணூர் அசோக் லேலண்ட் நிறுவனத்தில் மேலும் 7 நாட்கள் உற்பத்தி நிறுத்தப்படுவதாகவும் இந்த நாட்களில் தொழிலாளர்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கட்டாய விடுப்பு அறிவித்த நாட்களுக்கான ஊதியம் குறித்து தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.