மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட.. ஹோட்டல் ஊழியருக்கு அரிவாள் வெட்டு.. பரபரப்பு சி.சி.டி.வி காட்சி!
சென்னை: உணவகத்தில் மது அருந்தியவரை தட்டிக்கேட்ட உணவக ஊழியரை மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை முனிச்சாலை பகுதியில் துர்கா என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. மதுரை காமராஜபுரத்தை சேர்ந்த வாசுதேவன், வசந்தன், சதிஸ், செல்வகுமார் ஆகிய 4 பேரும் இந்த உணவகத்துக்கு சாப்பிட வந்துள்ளனர். இதனையடுத்து உணவகத்திற்குள் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

அரிவாள் வெட்டு
அப்போது உணவகத்தின் ஊழியர் ''எங்கள் உணவகத்தில் மது அருந்தக்கூடாது. உணவகத்தில் சாப்பிட மட்டுமே வேண்டும்'' என்று அவரிடம் கூறினார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதனால் ஆத்திரமடைந்த நான்கு பேரும் உணவக ஊழியரான முனீஸ்வரன் என்பவரை வாள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளனர் பின்னர் அந்த கும்பல் அங்கு இருந்து தப்பிச்சென்றது.

4 பேர் கைது
இதில் படுகாயமடைந்த உணவக ஊழியர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரையும் காவல்துறை தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.

பதறவைக்கும் சி.சி.டி.வி காட்சிகள்
உணவக ஊழியரை கும்பல் அரிவாளால் வெட்டும் நெஞ்சை பதறவைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் இதுபோல் குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பட்டபகலில். பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வாள் உள்ளிட்ட ஆயதங்களுடன் சமூக விரோதிகள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். எனவே காவல்துறையினர் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மது என்னும் அரக்கன்
மது என்னும் அரக்கன் தந்தையின் உயிரை பறித்து மகனை கொலைகாரனாக்கி உள்ளது. தமிழகத்தில் மதுபோதையில் இதுபோல் குற்றச் செயல்கள் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே தமிழகத்தில் மதுக்கடைகளை பாதியளவு குறைக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications