பின்னால் வந்து மோதிய லாரி.. நொறுங்கிய கார்! விபத்தில் சிக்கிய ஆவடி போலீஸ் கமிஷனர் நிலை என்ன?
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே போக்குவரத்து நெரிசலில் நின்று கொண்டிருந்த ஆவடி காவல் ஆணையர் காரின் மீது பின்னால் நின்ற லாரி மோதியது. இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் வரும் 19 ஆம் தேதி முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்குதல், முடிவுற்ற திட்டங்களை தொடங்குதல், முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் என பல்வேறு பணிகளுக்காக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆவடி காவல் ஆணையர் சங்கர் தினம் தோறும் ஆய்வு செய்து வருகிறார். சம்பவ இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள், முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்ள உள்ள ரோடு ஷோவுக்கான பாதைகள் உள்ளிட்டவற்றையும் காவல் ஆணையர் ஆய்வு செய்தார். அந்த வகையில் இன்றும் முதல்வரின் நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவிட்டு தனது காரில் சோழவரம் வழியாக சென்று கோண்டிருந்தார்.
அப்போது ஜி.என்.டி சாலையில் சென்பிலி சோழவரம் சந்திப்பில் வாகனங்கள் சாலையை கடக்க நின்று கொண்டிருந்தன. அந்த வகையில், ஆவடி காவல் ஆணையரின் வாகனமும் நின்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த லாரியின் டயர் ஒன்று வெடித்து கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடி முன்னால் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது மோதியது. இதில் அந்த சரக்கு வாகனம் ஆவடி மாநகர காவல் ஆணையரின் கார் மீது பயங்கரமாக மோதியது.
இதில் காவல் ஆணையர் பயணித்த கார் நொறுங்கியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஆவடி மாநகர காவல் ஆணையர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். காவல் ஆணையரின் பாதுகாவலர் மாரி செல்வம் என்பவர் கையில் காயம் அடைந்தார். அவரை மீட்ட போக்குவரத்து காவல்துறையினர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விபத்தில் சிக்கியதில் ஆவடி காவல் ஆணையரின் காரின் பக்கவாட்டு பகுதியில் பலத்த சேதம் அடைந்தது.
இந்த விபத்தை அடுத்து அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்தனர். சென்னை அருகே வாகன விபத்தில் காவல் உயர் அதிகாரியான ஆவடி காவல் ஆணையரின் கார் சிக்கிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பாக போலீசார் விசாரனை நடத்தி வருகிறார்கள்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications